கடைசி டி20 போட்டி: இந்தியா அபார வெற்றி

Published:

இங்கிலாந்து அணியுடனான கடைசி டி 20 போட்டியில், இந்திய அணி அபார வெற்றி பெற்றது. 75 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வென்ற இந்திய அணி, டி20 தொடரையும் கைப்பற்றியது.

முதலில் பேட் செய்த இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 202 ரன் எடுத்தது. 203 ரன் என்ற இலக்கை நோக்கித் துரத்திய இங்கிலாந்து அணி, 16.3 ஓவர் விளையாடி, அனைத்து விக்கெட்களையும் இழந்து 127 ரன்களே எடுத்து 75 ரன் வித்தியாசத்தில் தோல்வியைச் சந்தித்தது.

இந்திய அணி தரப்பில் ஷஹல் 6 விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்தார். இங்கிலாந்து தரப்பில் ராய் 32 ரன்னும், ரூட் 42 ரன்னும், மோர்கன் 40 ரன்னும் எடுத்தனர். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் ஆட்டம் இழந்தனர். ஆறு பேர் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டம் இழந்தது குறிப்பிடத்தக்கது.
இதன் மூலம் இந்திய அணி தொடரை வென்று சாதனை படைத்தது.

ALSO READ:  பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img