ஆதியோகி சிலை திறப்பு விழாவில் மோடி பேச்சு

Published:

*மந்திரங்கள் வேறுபட்டாலும் சிவன் என்பதே ஆதி மந்திரம்: ஈஷா யோகா விழாவில் மோடி பேச்சு*

*கோவை அடுத்து வெள்ளியங்கிரில் ஈஷா யோகா மையம் சார்பில் 112 அடி உயர பிரம்மாண்ட ஆதி யோகி சிவன் சிலை திறப்பு விழாவை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.*

*பின்னர் அவர் பேசியதாவது, எல்லோருக்கும் வணக்கம் என தமிழில் பேசி பின்னர் ஆங்கிலத்தில் உரையாற்றினார்.*

*இந்த மகாசிவராத்திரியில் ஆதி யோகி சிவன் சிலையை திறந்து வைப்பதில் மிகுந்த பெருமை அடைகிறேன்.*

*மந்திரங்கள் வேறுபட்டாலும் சிவன் என்பதே ஆதி மந்திரம். கடவுள்கள் பல இருந்தாலும் மகாதேவன் ஒருவரே.*

*இயற்கை பாதுகாப்பை இந்த சிவராத்திரி வலியுறுத்துகிறது.*

*வேறுபாடுகளுக்கு அப்பால் , பக்தியால் நாம் இன்று ஒன்றுபட்டிருக்கிறோம்.*

*இன்று யோகா பயிற்சி உலகம முழுவதும் பரவலாகி வருகிறது.*

*இந்த யோகா கலையை அதன் ஆத்மார்த்தமான சாராம்சத்துடன் காப்பாற்றுவது முக்கியம். என்னில் தொடங்கி நம்மில் முடிவதே யோகாவின் சிறப்பு.*

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து வஸ்திரம் மரியாதை!

*இமாலாயா-கன்னியாகுமரி இணைப்பு சிவன் பார்வதி இணைப்பை போன்றது என கூறினார்.*

*இந்திய நாகரிகத்தின் உதாரணம்*

*காடு மலை மரம், பறவை உள்ளிட்ட இயற்கையின் ஆன்மிகமே கடவுளிலும் உள்ளது. மூதாதையர்கள் வாழ்ந்த வழிமுறை இந்திய நாகரிகத்தின் உதாரணம்.*

*மூதாதையர்களின் வழிமுறை என காரணம் காட்டி ஒதுக்குவது ஆபத்தானது*

*பெண்களின் முன்னேற்றம்*

*பெண்களின் முன்னேற்றம் இல்லையேல் மனித நேயத்தில் முன்னேற்றம் இல்லை.*

*பெண்களின் தெய்வீக அந்தஸ்து நிபந்தனையற்றது. கலாசாரத்தில் பெண்களின் பங்கு முக்கியமானது.*

*ஆனால் ஆண்கள் நன்மை செய்தால் மட்டுமே தெய்வீக அந்தஸ்தை பெற முடியும் என்ற நிபந்தனை உள்ளது.*

*புதிய சிந்தனைகளை வரவேற்பது நமது சமூகம். பழமையான சிந்தனைகளை ஆய்வு செய்து புதுப்பித்துக்கொள்கிறோம்.*

*ஆன்மிகம் ஒன்றே*

*உலகில் பல மொழிகள் இருந்தாலும் ஆன்மிகம் என்பது ஒன்றே . யோகாவை உலக நாடுகளுக்கு இந்தியா பரிசாக அளித்துள்ளது. ஜூன் 21 சர்வதேச யோகா தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. நான் என்னும் பயணத்தில் துவங்கி நாம் என்பதில் முடிவதே யோகா.யோகா என்பது நோயிலிருந்து விடுபடக்கூடியது என மோடி கூறினார்.*

ALSO READ:  ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img