மதம் மாற நிலம்: சிறுபான்மையினர் கொதிப்பு

சேலம்: சேலத்தில், இலவச நிலம், பணம் கொடுத்து, சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்களை, மதம் மாற்றும் முயற்சி நடந்தது. தகவலறிந்து சென்ற, ஒரு மதத்தினர், திடீர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திடீர் பிரச்னை-சேலம், களரம்பட்டி யில், கிறிஸ்தவ மதத்துக்குரிய, ஜீவ ஒளி திருச்சபை கட்டடம் உள்ளது. இங்கு, பாதிரியாராக, ஐசக் என்பவர் உள்ளார்; இவர், இஸ்லாமிய மதத்தில் இருந்து, கிறிஸ்தவ மதத்துக்கு, தன்னுடைய குடும்பத்தினருடன் மதம் மாறியவர். இதை தொடர்ந்து, இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த சிலரை, கிறிஸ்தவ மதத்தில் சேர்க்கும் முயற்சியை, இவர் மேற்கொண்டதாக தெரிகிறது. இதற்காக, இலவச நிலம், பணம் தருவதாக ஆசைவார்த்தை கூறிஉள்ளார். நேற்று காலை, கிச்சிப்பாளையம், களரம்பட்டி, லைன்மேடு, முகம்மதுபுறா உள்ளிட்ட, பகுதிகளில் இருந்து, இஸ்லாமிய பெண்கள், 50க்கும் மேற்பட்டோரை அழைத்து வந்து, திருச்சபையில் அமர வைத்துள்ளார். பின், அந்த பெண்கள் அணியும், சில நகைகளை கழற்றி விடுமாறு கூறியுள்ளார். மதம் மாற்றம் நடப்பது தொடர்பான தகவல், சேலம் கோட்டை, த.மு.மு.க., நிர்வாகிகளுக்கு தெரியவந்தது. அவர்கள், சம்பவ இடத்துக்கு சென்ற போது, திருச்சபையின் உள்ளே, முஸ்லிம் பெண்கள் அமர்ந்திருந்தனர்.

இதையடுத்து, பாதிரியார் ஐசக்கிடம், த.மு.மு.க.,வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கிறிஸ்தவ, இஸ்லாமிய சமூகத்தினரிடையே எழுந்த திடீர் பிரச்னை, போலீசார் கவனத்துக்கு சென்றது.போலீசில் புகார் –போலீசார், களரம்பட்டி வந்து, இரு மதத்தைச் சேர்ந்தவர்களையும் சமாதானப் படுத்தினர். தொடர்ந்து, திருச்சபையில் இருந்த பெண்கள், தங்களுடைய வீடுகளுக்கு திரும்பினர். இச்சம்பவம், அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. த.மு.மு.க., அம்மாபேட்டை மண்டல துணை செயலர் இப்ராகிம் கூறியதாவது:

களரம்பட்டியில் உள்ள சர்ச்சில், கிச்சிப்பாளையம் கரீம்காம்பவுண்ட் பகுதியைச் சேர்ந்த இஸ்லாமிய பெண்களை, மதம் மாற்றும் முயற்சி நடப்பதாக தகவல் வந்தது. அங்கு சென்று, சம்பந்தப்பட்ட பாதிரியாரிடம் விசாரித்தோம். அவர், ‘அரசின் இலவச நிலம் வழங்கும் திட்டத்தின்படி, நிலம் கொடுப்பதற்காக அழைத்து உள்ளோம்’ என்றார்.

ஆனால், மதம் மாற்றும் வகையில், சில தகவல்களை அந்த பாதிரியார் கூறியிருப்பது, எங்களுக்கு தெரியவந்தது. இதனால், அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டோம். பின், இந்த பிரச்னை போலீசாருக்கு தெரியவந்ததும், சம்பவ இடத்துக்கு வந்த அவர்கள், எங்களிடம் பேச்சு நடத்தினர்.

அப்போது, நடந்த சம்பவங்களை தெரிவித்தோம். ‘புகார் மனு கொடுங்கள்; வழக்கு பதிவு செய்வதற்கான முயற்சி எடுக்கிறோம்’ என்றனர். கிச்சிப்பாளையம் போலீசில் புகார் மனு அளிக்க உள்ளோம்.இவ்வாறு, அவர் கூறினார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories