லக்னோ: ஓட்டுச்சீட்டு மூலம் மீண்டும் தேர்தலை சந்திக்க பா.ஜ., தலைவர் அமித்ஷா தயாராக உள்ளாரா என பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கூறியுள்ளார்.
பத்திரிகையாளர்களிடம் அவர் கூறியதாவது:
தேர்தல் முடிவு அதிர்ச்சியளிக்கிறது. நம்ப முடியவில்லை. முடிவை ஏற்க கடினமாக உள்ளது. ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் கோளாறு உள்ளது. பா.ஜ. ஓட்டு மட்டும் தான் பதிவாகியது.
எந்த கட்சிக்கு ஓட்டுப்போட்டாலும், அந்த ஓட்டுகள் பா.ஜ.,விற்கு மட்டும் தான் சென்றது. முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளிலும் பா.ஜ., வெற்றி பெற்றுள்ளது. முஸ்லிம்கள் ஓட்டு பா.ஜ.,விற்கு எப்படி சென்றது.
ஓட்டுச்சீட்டு மூலம் மீண்டும் தேர்தலை சந்திக்க அமித்ஷா தயாராக உள்ளாரா.
பா.ஜ., ஜனநாயகத்தை கொலை செய்துள்ளது. அக்கட்சியின் வெற்றி ஜனநாயகத்திற்கு ஆபத்தானது. தேர்தலில் முறைகேடு நடந்துள்ளது என என்னிடம் பத்திரிகையாளர்கள் உட்பட பலர் முன்னர் கூறினார். ஆனால் அப்போது அதனை நான் ஏற்கவில்லை.
இந்த முடிவு தொடர்பாக தேர்தல் கமிஷனில் புகார் அளிப்போம். தேர்தல் முடிவை நிறுத்தி வைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


