December 7, 2025, 2:15 AM
25.6 C
Chennai

“கமல் சினிமாவை மட்டும் கவனித்தால் போதும்…” : வைகை செல்வன்

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, அரசியலுக்கு பிரவேசம் எடுத்துள்ளார். இதை தொடர்ந்து, அடுத்த மாதம் நடைபெற உள்ள ஆர்.கே. நகர் தொகுதி இடை தேர்தலில் போட்டியிடுவதாக அவர் அறிவித்துள்ளார்.

இதை தொடர்ந்து தீபா பேரவையை சேர்ந்த நிர்வாகிகள், ஆர்.கே. நகர் தொகுதி முழுவதும் வீடு வீடாக சென்று, வாக்குசேகரித்து வருகின்றனர்.

இதற்கிடையில், நேற்று இரவு தீபா, மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின், நினைவிடத்துக்கு சென்றார். இதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது, செய்தியாளர்களை சந்தித்த தீபா, தன்னை சிலர் மறைமுகமாக மிரட்டுவதாக தெரிவித்தார்.

இந்நிலையில், இன்று அதிமுக செய்தி தொடர்பாள வைகை செல்வன், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் கூறியதாவது:-

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, அரசியலுக்கு வருகிறார். இது எங்களுக்கு சந்தோஷம். அவரை வரவேற்கிறோம். ஆனால் அதிமுகவினர் மீது வீண் பழியை சுமத்தி வருவது தொடர்கதையாக கொண்டுள்ளார். இதுபோன்று அவர் பொய் பேசுவதை நிறுத்தி கொள்ள வேண்டும்.

ஜெயலலிதா, தனது உறவினர்கள் யாரையும் அரசியலுக்கு அழைக்க வில்லை. சேர்க்கவில்லை. அப்படி செய்வதாக இருந்தால், தீபாவை எப்போதோ அழைத்து வந்திருப்பார். ஆனால், சசிகலாவை கடந்த 30 ஆண்டுகளாக உடன் வைத்திருந்து, அரசியல் குறித்து கற்று கொடுத்துள்ளார். அவரும் அறிந்து இருக்கிறார்.

சில நாட்கள் பிரிந்து இருந்த சசிகலாவை மீண்டும், கட்சியில் இணைத்து கொண்டதும் ஜெயலலிதாதான். இது அதிமுகவினர் அனைவருக்கும் நன்றாக தெரியும். அப்படி இருக்கும்போது, மீண்டும் மீண்டும் தன்னை யாரோ மிரட்டுவதாக பொய் சொல்லிவரும் தீபா என்ன ஆதாயம் தேடுகிறார் என தெரியவில்லை.

அதேபோல் நடிகர் கமல், தனியார் டிவிக்கு பேட்டி அளித்தபோது, அரசியலில் மாற்றம் வேண்டும், விரைவில் தேர்தல் நடத்த வேண்டும் என கூறினார். அவருக்கு சினிமா மட்டும் தொழில் அதை மட்டும் பார்த்தால், போதும்.

சினிமாவுக்கு கனவும், கற்பனையும் தேவை. அந்த கனவையும், கற்பனையையும் சினிமாவில் மட்டும் கமல் செலுத்த வேண்டும். தேவையில்லாமல், அரசியலில் செலுத்துவது சரியானது அல்ல.இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

Topics

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Entertainment News

Popular Categories