December 7, 2025, 1:27 AM
25.6 C
Chennai

ரேசனில் அரிசி, பருப்பு தட்டுப்பாடு:போராட்டம் நடத்திய கனிமொழி கைது

சென்னை: மக்களுக்கு அத்தியாவசிய தேவையாக உள்ள ரேசன் பொருட்களுக்க தட்டுப்பாடு நிலவுவதாக திமுக ராஜ்யசபா எம்.பி கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார். டாஸ்மாக் கடைகளில் மட்டும் மதுபாட்டில்கள் தட்டுப்பாடின்றி கிடைப்பதாகவும் கூறியுள்ளார். ரேசன் கடை முன்பு போராட்டம் நடத்திய கனிமொழி உள்ளிட்ட திமுகவினர் கைது செய்யப்பட்டனர்.
தமிழகம் முழுவதும் ரேசன் கடைகளில் அரிசி, பருப்பு, பாமாயில் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அளிப்பதில்லை என்பது திமுகவினர் குற்றச்சாட்டு. பல தொகுதிகளில் திமுக எம்எல்ஏக்கள் ஆய்வு நடத்தி ஸ்டாலினுக்கு அறிக்கை அளித்தனர்.
இதனையடுத்து மாநிலம் முழுவதும் இன்று ரேசன்கடைகளை திமுகவினர் முற்றுகையிட்டனர். சென்னை ராயப்பேட்டையில் கனிமொழி எம்பி தலைமையில் போராட்டம் நடைபெற்றது. கடையை முற்றுகையிட முயன்ற கனிமொழி உள்ளிட்ட திமுகவினரை போலீசார் கைது செய்தனர்.
போராட்டத்தின் போது பேசிய கனிமொழி, மாநிலம் முழுவதும் மக்களுக்கு அத்தியாவசிய தேவையாக உள்ள ரேசன் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக குற்றம் சாட்டினார். டாஸ்மாக் கடைகளில் மட்டும் பொருட்கள் தடையின்றி கிடைப்பதாகவும் அவர் கூறினார்.
விலையில்லா அரிசி கொடுத்தாலும் அது தரமானதாக இருப்பதில்லை என்று கூறிய கனிமொழி, மக்களுக்கு பொருட்கள் கிடைக்கிறதா? என்பதைப்பற்றி அமைச்சர்கள் கவலைப்பட்டதாக தெரியவில்லை என்றார்.
அதிமுக எம்எல்ஏக்கள், அமைச்சர்களின் நிலையோ பரிதாபமாக உள்ளது. தங்களின் பதவியை பாதுகாத்துக்கொள்ளவே அவர்களுக்கு நேரம் சரியாக இருக்கிறது என்று கூறிய கனிமொழி, மக்களைப் பற்றி அவர்களுக்கு எந்த கவலையும் இல்லை என்றார்.
மாநிலம் முழுவதும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதாகவும், லாரி தண்ணீர் கூட பெரும் போராட்டத்திற்கு பிறகே கிடைப்பதாகவும் கனிமொழி குற்றம் சாட்டினார். பொருட்கள் தடையின்றி கிடைப்பதற்காகவே இந்த போராட்டத்தை எதிர்கட்சியான திமுக நடத்துவதாகவும் தெரிவித்தார். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட கனிமொழி எம்.பி உள்ளிட்ட திமுகவினரை போலீசார் கைது செய்தனர்.
தமிழகம் முழுவதும் ரேசன் கடைகளில் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதைக் கண்டித்து திமுகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்திய திமுகவினரை போலீசார் கைது செய்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

Topics

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Entertainment News

Popular Categories