December 6, 2025, 2:29 AM
26 C
Chennai

அம்மா உணவகம் மூலம் பண விநியோகம்: அதிர்ந்த அதிகாரிகள்!

சென்னை :
சென்னையில் அம்மா உணவகம் மூலம் பண விநியோகம் நடைபெற்றுள்ளது, அதிகாரிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. வெற்றி பெறவேண்டும் என்ற முனைப்பில் அனைத்துக் கட்சிகளும் தீவிரமாக களத்தில் இறங்கியுள்ளன. இந்ததேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்ற நிலை இருப்பதால் பணப்பட்டுவாடா தாராளமாக நடைபெறலாம் என்று தேர்தல் அறிவிப்பு வெளியானது முதலே தகவல் வெளியானது.

தேர்தல் கமி‌ஷன் தொடர்ந்து பாதுகாப்பை அதிகரித்து வருவதால் முன்கூட்டியே ஆர்.கே.நகர் தொகுதியில் பணபட்டுவாடா தொடங்கி விட்டது. நேற்று முன்தினம் இரவு விடிய, விடிய பணபட்டுவாடா நடந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக 15 பேர் கைது செய்யப்பட்டு இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது. லட்சக்கணக்கான பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையமும் மிகவும் விழிப்பாக கண்காணிப்பதால் வீடு தேடிச் சென்று பணபட்டுவாடா நடப்பது தவிர்க்கப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதையடுத்து திருமண மண்டபங்கள், திரையரங்குகள், சமூக நலக்கூடங்கள் போன்ற பொதுவான இடங்களில் வாக்காளர்களை வரவழைத்து ஒரு ஓட்டுக்கு ரூ.4 ஆயிரம் வீதம் வழங்கப்படுவதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

இதை எல்லாம் விட கொடுமையாக, வாக்காளர்களுக்கு கூப்பன்கள் வழங்கி அம்மா உணவகங்களில் ரூ.3 ஆயிரத்து 500 முதல் ரூ.5 ஆயிரம் வரை பணம் வினியோகம் நடப்பதாகவும் கூறப்படுகிறது. இவ்வாறு, விதவிதமான முறையில் பணப்பட்டுவாடா நடப்பது அதிகாரிகளை அதிர்ச்சியில் தள்ளியுள்ளது.

தேர்தல் ரத்தாகுமா? தினகரன் வேட்பாளர் தகுதி நீக்கமா?

தங்களுக்கு தினகரன் ஆள்கள் ரூ.4000/- பணத்தை கொடுத்தனர் என ஆர்.கே.நகர் மக்கள் தேர்தல் அதிகாரிகளிடம் வீடியோ ஆதாரங்களுடன் புகார் கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பெரும்பாலான பெண்கள் சாட்சி சொல்லவும் தயார் என கூறியுள்ளதால் முடிவெடுக்க நிர்பந்தத்தில் தேர்தல் கமிஷன் உள்ளது.எனவே இது குறித்து முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் வாய்ப்பு உள்ளது என ஆணைய வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories