அம்மா உணவகம் மூலம் பண விநியோகம்: அதிர்ந்த அதிகாரிகள்!

சென்னை :
சென்னையில் அம்மா உணவகம் மூலம் பண விநியோகம் நடைபெற்றுள்ளது, அதிகாரிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. வெற்றி பெறவேண்டும் என்ற முனைப்பில் அனைத்துக் கட்சிகளும் தீவிரமாக களத்தில் இறங்கியுள்ளன. இந்ததேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்ற நிலை இருப்பதால் பணப்பட்டுவாடா தாராளமாக நடைபெறலாம் என்று தேர்தல் அறிவிப்பு வெளியானது முதலே தகவல் வெளியானது.

தேர்தல் கமி‌ஷன் தொடர்ந்து பாதுகாப்பை அதிகரித்து வருவதால் முன்கூட்டியே ஆர்.கே.நகர் தொகுதியில் பணபட்டுவாடா தொடங்கி விட்டது. நேற்று முன்தினம் இரவு விடிய, விடிய பணபட்டுவாடா நடந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக 15 பேர் கைது செய்யப்பட்டு இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது. லட்சக்கணக்கான பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையமும் மிகவும் விழிப்பாக கண்காணிப்பதால் வீடு தேடிச் சென்று பணபட்டுவாடா நடப்பது தவிர்க்கப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதையடுத்து திருமண மண்டபங்கள், திரையரங்குகள், சமூக நலக்கூடங்கள் போன்ற பொதுவான இடங்களில் வாக்காளர்களை வரவழைத்து ஒரு ஓட்டுக்கு ரூ.4 ஆயிரம் வீதம் வழங்கப்படுவதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

ALSO READ:  மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

இதை எல்லாம் விட கொடுமையாக, வாக்காளர்களுக்கு கூப்பன்கள் வழங்கி அம்மா உணவகங்களில் ரூ.3 ஆயிரத்து 500 முதல் ரூ.5 ஆயிரம் வரை பணம் வினியோகம் நடப்பதாகவும் கூறப்படுகிறது. இவ்வாறு, விதவிதமான முறையில் பணப்பட்டுவாடா நடப்பது அதிகாரிகளை அதிர்ச்சியில் தள்ளியுள்ளது.

தேர்தல் ரத்தாகுமா? தினகரன் வேட்பாளர் தகுதி நீக்கமா?

தங்களுக்கு தினகரன் ஆள்கள் ரூ.4000/- பணத்தை கொடுத்தனர் என ஆர்.கே.நகர் மக்கள் தேர்தல் அதிகாரிகளிடம் வீடியோ ஆதாரங்களுடன் புகார் கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பெரும்பாலான பெண்கள் சாட்சி சொல்லவும் தயார் என கூறியுள்ளதால் முடிவெடுக்க நிர்பந்தத்தில் தேர்தல் கமிஷன் உள்ளது.எனவே இது குறித்து முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் வாய்ப்பு உள்ளது என ஆணைய வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

Topics

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

Entertainment News

Popular Categories