December 6, 2025, 12:26 AM
26 C
Chennai

காதலனுடன் பூங்காவிற்கு சென்ற பெண்ணிற்கு நேர்ந்த கதி! கத்தி முனையில் கூட்டு பாலியல் வன்கொடுமை!

vellur - 2025

வேலூர் கோட்டை பூங்கா பகுதியில் இரவு நேரத்தில் காதலன் முன்னிலையில் இளம்பெண்ணை கத்தி முனையில் பாலியல் வன்கொடுமை செய்த மர்ம நபர்கள் குறித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

வேலூர் அருகேயுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 24 வயது இளம் பெண். இவர், வேலூரில் உள்ள ஒரு துணிக்கடையில் பணியாற்றி வருகிறார். அதே கடையில் காட்பாடி அருகேயுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 19 வயதான இளைஞரும் பணியாற்றி வருகிறார். இவர்கள், இருவரும் கடந்த சில மாதங்களாக காதலித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 9.30 மணிக்கு பணி முடிந்த பிறகு இருவரும் ஆட்டோவில் சாரதி மாளிகை எதிரேயுள்ள கோட்டை பூங்காவுக்குச் சென்றுள்ளனர்.

பூங்கா இரவு 8 மணிக்கு மூடப்பட்ட நிலையில் இருவரும் மீன் மார்க்கெட் எதிரே உள்ள இரும்பு தடுப்புகளை தாண்டி பூங்காவுக்குள் சென்றுள்ளனர். அகழியின் கரையில் அமர்ந்தபடி இருவரும் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த மர்ம நபர்கள் 3 பேர் கத்தி முனையில் இளம் பெண்ணை தூக்கிச் சென்றுள்ளனர்.

இளைஞரின் கண் முன்னே இளம்பெண்ணை 3 பேரும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பின்னர், இளம்பெண் அணிந்திருந்த தங்கச் சங்கிலி, கம்மல் மற்றும் இளைஞர் வைத்திருந்த செல்போனை பறித்துக் கொண்டு அவர்கள் தப்பியுள்ளனர்.

உடல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட இளம் பெண்ணை அவரது காதலர் அழைத்துக் கொண்டு இரவு 11.30 மணியளவில் பூங்காவுக்கு வெளியே வந்துள்ளார். இது தொடர்பாக வடக்கு காவல் நிலையத்தில் இளைஞர் புகார் அளித்தார்.

பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக வேலூர் சரக டிஐஜி காமினி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ்குமார் ஆகியோர் வடக்கு காவல் நிலையத்தில் நேற்று விசாரணை நடத்தினர். மேலும், புகார் தெரிவித்த இளைஞரை கோட்டை பூங்கா பகுதிக்கு அழைத்துச் சென்று இளம்பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை எவ்வாறு நடந்தது என்பது குறித்து கேட்டறிந்தனர்.

கோட்டைப் பூங்காவில் இளம்பெண்ணை கத்தி முனையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய நபர்களை கைது செய்ய 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இவர்கள் யார்? எந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.

அதன் அடிப்படையில், வேலூர் வசந்தபுரம் பகுதியைச் சேர்ந்த இரண்டு பேரை காவல் துறையினர் சந்தேகத்தின் பேரில் நேற்று பிடித்து விசாரித்தனர்.

kaithu - 2025

இவர்கள் இருவரும் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய நபர்கள் என உறுதியானது. இதில், தொடர்புடைய மேலும் ஒருவரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

வேலூர் கோட்டை பூங்காவில் இரவு நேரங்களில் பூங்காவை மூடியதும் உள்ளே செல்லும் சமூக விரோதிகள் அகழிக் கரையையொட்டி அமைந்துள்ள புதர்களின் மறைவில் மதுபானம் அருந்துவதுடன் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வரு கின்றனர். கோட்டையில் இரவு நேரங்களில் போதிய காவலர்கள் நியமிக்காததால் இதுபோன்ற செயல்கள் நடைபெறுவதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ் குமாரிடம் கேட்டதற்கு, ”வேலூர் கோட்டை பகுதியில் இரவு 10 மணியளவில் காவல் துறையினர் ரோந்து செல்கின்றனர். அதேநேரம், கோட்டைப் பகுதி மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் இருப்பதால் அங்கு போதிய அளவுக்கு இரவு காவலர்களை அவர்கள்தான் நியமிக்க வேண்டும்.

இது தொடர்பாக தொல்லியல் துறை அதிகாரிகளிடம் பேசியுள்ளோம். இரவு நேரங்களில் கூடுதல் காவலர்களை நியமிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், கோட்டை பகுதியில் கண்காணிப்புப் பணியை அதிகரிக்கவும் எங்கள் தரப்பில் நடவடிக்கை எடுத்துள்ளோம்” என தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories