காதலனுடன் பூங்காவிற்கு சென்ற பெண்ணிற்கு நேர்ந்த கதி! கத்தி முனையில் கூட்டு பாலியல் வன்கொடுமை!

vellur - 2026

வேலூர் கோட்டை பூங்கா பகுதியில் இரவு நேரத்தில் காதலன் முன்னிலையில் இளம்பெண்ணை கத்தி முனையில் பாலியல் வன்கொடுமை செய்த மர்ம நபர்கள் குறித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

வேலூர் அருகேயுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 24 வயது இளம் பெண். இவர், வேலூரில் உள்ள ஒரு துணிக்கடையில் பணியாற்றி வருகிறார். அதே கடையில் காட்பாடி அருகேயுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 19 வயதான இளைஞரும் பணியாற்றி வருகிறார். இவர்கள், இருவரும் கடந்த சில மாதங்களாக காதலித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 9.30 மணிக்கு பணி முடிந்த பிறகு இருவரும் ஆட்டோவில் சாரதி மாளிகை எதிரேயுள்ள கோட்டை பூங்காவுக்குச் சென்றுள்ளனர்.

பூங்கா இரவு 8 மணிக்கு மூடப்பட்ட நிலையில் இருவரும் மீன் மார்க்கெட் எதிரே உள்ள இரும்பு தடுப்புகளை தாண்டி பூங்காவுக்குள் சென்றுள்ளனர். அகழியின் கரையில் அமர்ந்தபடி இருவரும் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த மர்ம நபர்கள் 3 பேர் கத்தி முனையில் இளம் பெண்ணை தூக்கிச் சென்றுள்ளனர்.

இளைஞரின் கண் முன்னே இளம்பெண்ணை 3 பேரும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பின்னர், இளம்பெண் அணிந்திருந்த தங்கச் சங்கிலி, கம்மல் மற்றும் இளைஞர் வைத்திருந்த செல்போனை பறித்துக் கொண்டு அவர்கள் தப்பியுள்ளனர்.

ALSO READ:  பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

உடல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட இளம் பெண்ணை அவரது காதலர் அழைத்துக் கொண்டு இரவு 11.30 மணியளவில் பூங்காவுக்கு வெளியே வந்துள்ளார். இது தொடர்பாக வடக்கு காவல் நிலையத்தில் இளைஞர் புகார் அளித்தார்.

பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக வேலூர் சரக டிஐஜி காமினி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ்குமார் ஆகியோர் வடக்கு காவல் நிலையத்தில் நேற்று விசாரணை நடத்தினர். மேலும், புகார் தெரிவித்த இளைஞரை கோட்டை பூங்கா பகுதிக்கு அழைத்துச் சென்று இளம்பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை எவ்வாறு நடந்தது என்பது குறித்து கேட்டறிந்தனர்.

கோட்டைப் பூங்காவில் இளம்பெண்ணை கத்தி முனையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய நபர்களை கைது செய்ய 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இவர்கள் யார்? எந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.

அதன் அடிப்படையில், வேலூர் வசந்தபுரம் பகுதியைச் சேர்ந்த இரண்டு பேரை காவல் துறையினர் சந்தேகத்தின் பேரில் நேற்று பிடித்து விசாரித்தனர்.

kaithu - 2026

இவர்கள் இருவரும் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய நபர்கள் என உறுதியானது. இதில், தொடர்புடைய மேலும் ஒருவரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

ALSO READ:  திமுக வேட்பாளர் வீட்டில் நகை கொள்ளை - வேட்பாளரின் மருமகள் உள்ளிட்ட 3 பேர் கைது...

வேலூர் கோட்டை பூங்காவில் இரவு நேரங்களில் பூங்காவை மூடியதும் உள்ளே செல்லும் சமூக விரோதிகள் அகழிக் கரையையொட்டி அமைந்துள்ள புதர்களின் மறைவில் மதுபானம் அருந்துவதுடன் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வரு கின்றனர். கோட்டையில் இரவு நேரங்களில் போதிய காவலர்கள் நியமிக்காததால் இதுபோன்ற செயல்கள் நடைபெறுவதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ் குமாரிடம் கேட்டதற்கு, ”வேலூர் கோட்டை பகுதியில் இரவு 10 மணியளவில் காவல் துறையினர் ரோந்து செல்கின்றனர். அதேநேரம், கோட்டைப் பகுதி மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் இருப்பதால் அங்கு போதிய அளவுக்கு இரவு காவலர்களை அவர்கள்தான் நியமிக்க வேண்டும்.

இது தொடர்பாக தொல்லியல் துறை அதிகாரிகளிடம் பேசியுள்ளோம். இரவு நேரங்களில் கூடுதல் காவலர்களை நியமிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், கோட்டை பகுதியில் கண்காணிப்புப் பணியை அதிகரிக்கவும் எங்கள் தரப்பில் நடவடிக்கை எடுத்துள்ளோம்” என தெரிவித்தார்.

ALSO READ:  சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு ஆண்டாள் திரு ஆடி பூர நந்தவனத்தில் எழுந்தருளல் நிகழ்வு இன்று சனிக்கிழமை விமர்சையாக நடைபெற்றது.

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் கட்சி மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு-மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன் பேசினார்.

உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!

உணவுப்பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள் உங்களை வணங்குகிறேன்-சம்பா மிளகாய் மதிப்புக்கு கூட்டப்பட்ட உற்பத்தி நிறுவனமான குளோபல் சில்லி அக்ரோ பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை திறந்து வைத்து

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு ஆண்டாள் திரு ஆடி பூர நந்தவனத்தில் எழுந்தருளல் நிகழ்வு இன்று சனிக்கிழமை விமர்சையாக நடைபெற்றது.

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் கட்சி மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு-மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன் பேசினார்.

உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!

உணவுப்பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள் உங்களை வணங்குகிறேன்-சம்பா மிளகாய் மதிப்புக்கு கூட்டப்பட்ட உற்பத்தி நிறுவனமான குளோபல் சில்லி அக்ரோ பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை திறந்து வைத்து

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

Entertainment News

Popular Categories