December 6, 2025, 12:20 PM
29 C
Chennai

வில்சனை சுட்டுக் கொல்ல பயன்படுத்தப் பட்ட துப்பாக்கி மீட்பு!

kalikavalai - 2025

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை எஸ்.எஸ்.ஐ., வில்சனை சுட்டுக் கொல்ல பயன்படுத்தப் பட்ட துப்பாக்கி, எர்ணாகுளத்தில் உள்ள கழிவுநீர் ஓடையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை காவல் நிலையத்தில், சிறப்பு எஸ்எஸ்ஐ.,யாக பணியாற்றியவர் வில்சன் (57). இவர் கடந்த 8ஆம் தேதி இரவு தமிழக- கேரள எல்லையில் உள்ள களியக்காவிளை சோதனைச் சாவடியில் பணியில் இருந்தபோது, இரண்டு பேர் வில்சனை துப்பாக்கியால் சுட்டும் அரிவாளால் வெட்டியும் படுகொலை செய்துவிட்டு, அருகில் இருந்த மசூதியை நோக்கி ஓடினர்.

கண்காணிப்புக் கேமராவில் பதிவாகியிருந்த இந்தக் காட்சிகள் அப்போதே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தின. இந்நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய இருவரையும் போலீசார் தேடி வந்தனர்.

இதை அடுத்து, அந்த இருவரும் பயங்கரவாத தொடர்பில் இருந்ததும், கர்நாடக மாநிலம் உடுப்பி பகுதியில் அவர்கள் இருந்து வந்ததும் மேலும், அவர்கள் உடுப்பியில் இருந்து மங்களூர் வந்து, அங்கிருந்து நேபாளம் வழியாக தப்பித்துச் செல்ல இருப்பதும் தெரியவந்தது.

kalikavalai 3 - 2025

இந்நிலையில், அவர்கள் இருவரும் கன்னியாகுமரி மாவட்டம், அடப்புவிளையை சேர்ந்த அப்துல் சமீம், (வயது 29) நாகர்கோவில் கோட்டார் மாலிக் தினார் நகரை சேர்ந்த தவுபீக் (வயது 27) என அடையாளம் கண்டு அவர்களை கர்நாடக போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது, கொலை, கொலை மிரட்டல் மற்றும் சட்ட விரோத செயல்பாடுகள் தடுப்பு பிரிவு என்ற, ‘உபா’ சட்டத்தின் கீழ், வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இருவரையும், கன்னியாகுமரி மாவட்ட போலீசார், 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.

IMG 20200123 WA0008 - 2025
முதல்கட்ட விசாரணையில் கைப்பற்றப்பட்ட துப்பாக்கி ராணுவத்தில் பயன்படுத்தப் படுகின்ற வகையைச் சேர்ந்தது என கூறப்படுகிறது

இதனிடையே, அவர்கள் இருவரையும் போலீசார் கேரளா அழைத்து சென்று விசாரித்தனர். அப்போது, வில்சலை கொலை செய்ய பயன்படுத்திய துப்பாக்கியை எர்ணாகுளம் பேருந்து நிலையம் அருகேயுள்ள கழிவுநீர் ஓடையில் வீசிவிட்டு சென்றதாகக் கூறினர். இதனையடுத்து அவர்கள் கூறிய இடத்திற்கு அழைத்துச் சென்ற போலீசார், கழிவுநீர் ஓடையில் இருந்து துப்பாக்கியை மீட்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories