December 5, 2025, 5:19 PM
27.9 C
Chennai

போக்குவரத்து பணியாளர்கள் வேலை நிறுத்தம் தாற்காலிகமாக வாபஸ்!

TNSTC buses indefinite strike - 2025

சென்னை:

போக்குவரத்துக் கழகப் பணியாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் தாற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் போக்குவரத்து தொழிற்சங்கங்களைச் சேர்ந்தவர்களுடன் அமைச்சர்கள் எம்.ஆர். விஜயபாஸ்கர், தங்கமணி, செங்கோட்டையன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தப் பேச்சுவார்த்தையின்போது, தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என தொழிற்சங்கங்த்தினர் வலியுறுத்தினர்.

இந்நிலையில் முதற்கட்டமாக ரூ. 1000 கோடி வழங்க அரசுத் தரப்பில் சம்மதம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்று மாதங்களுக்குப் பிறகு ரூ. 250 கோடி வழங்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டதாம். எனவே, தொழிற்சங்கங்கள் தங்களது வேலைநிறுத்தப் போராட்டத்தை தாற்காலிகமாக ஒத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.

முன்னதாக, ஒய்வூதிய பலன்கள் உட்பட, தங்களுக்கு சேர வேண்டிய, ரூ 7,000 கோடி நிலுவைத் தொகையைக் கேட்டு போக்குவரத்து தொழிற்சங்கங்கள், வேலை நிறுத்தத்தை துவக்கின.

இதனிடையே, போக்குவரத்துப் பணியாளர்கள் உடனடியாக பணிக்குத் திரும்ப வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. அரசு பஸ் போக்குவரத்துக் கழகப் பணியாளர்களின் வேலைநிறுத்தத்துக்கு எதிராக செந்தில் குமரய்யா என்பவர் மனுதாக்கல் செய்தார்.

அதில் போக்குவரத்துப் பணியாளர்களின் வேலைநிறுத்தம் சட்ட விரோதமானது. அவர்கள் மீது எஸ்மா சட்டத்தை பயன்படுத்த வேண்டும். இதனை அவசர வழக்காகக் கருதி விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் முரளிதரன், சேஷசாயி ஆகியோர் முன்பு, இன்று மாலை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், போக்குவரத்துப் பணியாளர்கள் உடனே பணிக்குத் திரும்ப வேண்டும். வராதவர்கள் மீது எஸ்மா சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

இந்நிலையில், போக்குவரத்து தொழிற்சங்கங்கள், தங்களது வேலைநிறுத்தப் போராட்டத்தை தாற்காலிகமாக வாபஸ் பெறுவதாகக் கூறியுள்ளன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories