December 6, 2025, 6:07 PM
26.8 C
Chennai

நாளை திருமணம்.. மாப்பிள்ளையைக் கொன்ற மைத்துனர்!

marriage - 2025

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே நாளை திருமணம் நடைபெற இருந்த புதுமாப்பிள்ளையை படுகொலை செய்ததாக மைத்துனர் கைது செய்யப்பட்டார்.

சங்கரன்கோவில் தென்மலை இந்திரா காலனியை சேர்ந்தவர் முனியப்பன். JCB ஆப்ரேட்டராக பணிபுரிந்த இவருக்கு நாளை காலை திருமணம் நடப்பதாக இருந்தது.

murder 1 - 2025

இதையொட்டி வீட்டின் முன் பந்தல் அலங்காரம் செய்து உறவினர்களும் குழுமி இருந்தனர். திருமணம் நடப்பதற்கான அனைத்து வேளைகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில், இன்று அதிகாலை 2 மணியளவில் முனியப்பன் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.

இதனை கண்ட குடும்பத்தினர், கிராம மக்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர். பெண் வீட்டிற்கு தகவல் தெரிவித்த நிலையில் புதுப்பெண் பெரும் சோகத்தில் மூழ்கினார்.

murder - 2025

இதனிடையே தகவல் அறிந்து அங்கு சென்ற காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது, மணமகன் முனியப்பனுக்கும், அவரது தங்கை கணவரான வீரசங்கிலி முருகனுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அவரை முனியப்பன் தாக்கியதாக தெரிகிறது.

இதில் ஆத்திரம் அடைந்த வீரசங்கிலி முருகன், மது போதையில் நள்ளிரவில் அனைவரும் தூங்கிய பின்பு வீட்டுக்குள் தூங்கிக்கொண்டிருந்த முனியப்பனை கழுத்தில் கத்தியால் குத்தி கொலை செய்திருப்பதும் தெரியவந்தது.

muniappan - 2025

இதையடுத்து வீரசங்கிலி முருகனை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். நாளை திருமணம் நடக்கவிருந்த நிலையில் மணமகனை அவரது தங்கை கணவரே கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories