வடகம் செய்ய போறிங்களா? உங்களுக்காக இது!

vadakam - 2026

1.வடகத்துக்கு கூழ் காய்ச்சும்போது பால் சேர்த்துக் காய்ச்சினால் பொரித்தபின் வெண்மையாக இருக்கும்.

2.எந்த வடகத்துக்கான மாவையும் முதல்நாள் இரவு ஒரு தூக்கில் கொட்டி மூடி வைத்துவிட்டு, மறுநாள் காலையில் பிழிந்தால் கை எரியாது.

3. கொத்துமல்லி அதிகமாகவும், மலிவாகவும் கிடைக்கும் நாள்களில் வாங்கி பச்சை மிளகாய், உப்பு சேர்த்து அரைத்து வடையாகத் தட்டி வெயிலில் காய வைத்து வடகமாகச் செய்து வைத்துக் கொள்ளலாம். இதனை குழம்பிலோ ரசத்திலோ போட்டால் வாசனையாக இருக்கும். தயிர் பச்சடி செய்தால் ருசி அருமையாக இருக்கும்.

4. ஜவ்வரிசி வடகம் எப்போதுமே வாயில் ஒட்டிக்கொண்டு இம்சை செய்யும். ஜவ்வரிசியை வேக வைக்கும்போது சிறிது அரிசிமாவையும் கலந்து வேக வைத்து செய்தால், சாப்பிடும்போது வாயில் ஒட்டிக் கொள்ளாது.

5. பொடியான பழைய வடகத்தை எண்ணெயில் பொரித்து வைத்துக் கொள்ளுங்கள். தயிரில் பச்சை மிளகாய், கொத்துமல்லி, தேங்காய், உப்பு சேர்த்து கலந்து பொரித்த வடகத்தையும் போட்டுப் பரிமாறலாம்.

6. வடகத்தைப் பிழிந்து காய வைத்திருக்கும் இடத்தின் நான்கு மூலையிலும் நான்கு ஸ்டூல்களை தலைகீழாகப் போட்டு வடாமுக்கு குறுக்கும் நெடுக்குமாக நூலை நன்கு சுற்றிவிட வேண்டும். இதைப் பார்க்கும் காகங்கள் ஏதோ வலை என்று நினைத்து அருகிலேயே வராது.

7. ஜவ்வரிசி வடகம் முத்து முத்தாக இருக்க வேண்டும் என்றால் ஊற வைக்காமல் தண்ணீருடன் சேர்த்துக் கிளற வேண்டும்.
ஜவ்வரி வடகத்துக்கு தண்ணீர் அதிகமாக ஊற்றினால் கொஞ்சம் அவலை எடுத்து ஊற வைத்து அதனுடன் கலந்து விட்டால் கெட்டியாகிவிடும், சுவையும் அதிகமாகும்.

8. வடகம் காய வைக்கும்போது எடை வைக்க கற்களை பாலிதீன் பைகளில் போட்டு வைத்தால் கல்லில் உள்ள மண், தூசி வடகத்தில் விழாது.

9. வடகம் வைத்திருக்கும் பாத்திரத்தில் சிறிது பெருங்காயத்தைப் போட்டு வைத்தால் சீக்கிரம் கெட்டுப் போகாது.

10. வடகத்துக்கு மாவு பிசையும்போது உப்பு அதிகம் சேர்க்கக் கூடாது. அப்போதுதான் வடகத்தை எண்ணெய்யில் பொரிக்கும்போது, உப்பு சுவை சரியாக இருக்கும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது… 30 வருட பரிணாம வளர்ச்சி!

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது... 30 வருட பரிணாம வளர்ச்சி!

பஞ்சாங்கம் மார்ச் 12 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

எரிவாயு சிலிண்டர், பெட்ரோல்; மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: பிரதமர் மோடி பேச்சு!

திருச்சியில் நடைபெற்ற தேஜகூட்டணி பொதுக்கூட்டத்தில், கூட்டணி தலைவர்கள் பேசியபோது,

தமிழருக்கான ரூ.5,650 கோடி திட்டங்கள் தொடங்க… இன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி!

தமிழகத்துக்கான ரூ.5,650 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி  திருச்சிக்கு வருகிறார். 

பஞ்சாங்கம் – மார்ச் 11 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது… 30 வருட பரிணாம வளர்ச்சி!

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது... 30 வருட பரிணாம வளர்ச்சி!

பஞ்சாங்கம் மார்ச் 12 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

எரிவாயு சிலிண்டர், பெட்ரோல்; மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: பிரதமர் மோடி பேச்சு!

திருச்சியில் நடைபெற்ற தேஜகூட்டணி பொதுக்கூட்டத்தில், கூட்டணி தலைவர்கள் பேசியபோது,

தமிழருக்கான ரூ.5,650 கோடி திட்டங்கள் தொடங்க… இன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி!

தமிழகத்துக்கான ரூ.5,650 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி  திருச்சிக்கு வருகிறார். 

பஞ்சாங்கம் – மார்ச் 11 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘அடிச்சி விடு’ புகழ், இப்போ ‘செல்லத் தட்டல்’ சேகர்பாபு ஆகிவிட்டார்: அண்ணாமலை கிண்டல்!

அது என்ன, திமுக தலைவர்கள் மட்டும் சாதாரண பொதுமக்களை அன்பாகத் தட்டிக் கொடுக்கும்போதெல்லாம், முகத்தை அப்படி கோபமாக வைத்துக் கொள்கிறீர்கள்?

தமிழகத்தில் இருந்த நாட்கள் பொற்கால நாட்கள்: ஆளுநர் ஆர்.என். ரவி உருக்கம்!

தமிழக மக்களுடன் கலந்து பழகிய 54 மாதங்கள் தம் வாழ்வின் பொற்கால நாட்கள் என்று தமிழக ஆளுநர் ஆர்என். ரவி உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

இக்கணம் – தேவை சிக்கனம்!

மத்திய கிழக்கில் போர் ஏற்பட்டதில் இருந்தே உலகின் பல நாடுகளிலும் பெட்ரோல் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட தொடங்கியது…

Entertainment News

Popular Categories