உலகமே சிரிக்கும் வகையில் போராட்டம்: அய்யாக்கண்ணு எச்சரிக்கை

ayyakannu - 2026

சென்னை:
உலமே சிரிக்கும் வகையில் போராட்டம் நடக்கும் என்று விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு கூறியுள்ளார்.

தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில், விவசாய சங்கப் பிரதிநிதிகள் நேற்று தலைமைச் செயலகத்தில் வேளாண் துறை அமைச்சர் துரைகண்ணுவை சந்தித்துப் பேசினர்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அய்யாக்கண்ணு, “தில்லியில் அண்மையில் 16 மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் கூடி விவசாயிகளுக்கான கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், விவசாயப் பொருட்களுக்கு லாபகரமான விலை கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டம் நடத்த முடிவு செய்தோம். தில்லியில் இருந்து திரும்பிய பின்னர் முதல்வரைச் சந்தித்துப் பேசுவதற்காக இன்று தலைமைச் செயலகத்துக்கு வந்தோம்; ஆனால் அவரைச் சந்திக்க முடியவில்லை. வேளாண் துறை அமைச்சரையும், துறைச் செயலரையும் சந்தித்தோம். இன்னும் ஒரு வார காலத்திற்குள் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், சென்னை சேப்பாக்கத்தில், காந்திய வழியில் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் எனத் தெரிவித்தோம். அது சிறிய போராட்டமாக இருக்காது. உலகமே சிரிக்கக்கூடிய வகையில் மிகப் பெரிய போராட்டமாக அமையும்” என்று கூறினார்.

ALSO READ:  அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

முன்னதாக, முதல்வரைச் சந்திக்க அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள், நேற்று காலை 11:15க்கு தலைமைச் செயலகம் வந்தனர். ஆனால் முதல்வரைச் சந்திக்க உரிய அனுமதி பெறாததால், விவசாயிகளை உள்ளே விட போலீசார் மறுத்தனர். இதனால் போலீசாருடன் வாக்குவாதம் ஏற்பட்டது. ‘முதல்வர் தில்லி செல்வதால் அவரால் விவசாயிகளை தற்போது சந்திக்க இயலாது’ என, போலீசார் கூறியதைத் தொடர்ந்து, வேளாண் அமைச்சரை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories