cars petrol - 2026

வரும் 2030 ஆம் ஆண்டில், பெட்ரோல் மற்றும் டீசலில் இயங்கக் கூடிய கார்கள் பயன்பாட்டில் இல்லாத நிலை உருவாகும் என ஆய்வு முடிவுகள் மூலம் தெரியவந்துள்ளது.

அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் உள்ள ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழக பொருளியல் வல்லுநரான டோனி செபா என்பவர், 2020 முதல் 2030-ம் ஆண்டுக்குள் போக்குவரத்து குறித்த மறுஆய்வு என்ற தலைப்பின் கீழ் ஆய்வு ஒன்றினை மேற்கொண்டார். அந்த ஆய்வின் முடிவில், 2030-இல் எரிசக்திப் பொருள்களின் பற்றாக்குறையாலும் சுற்றுச்சூழல் மாசுபாடு உள்ளிட்ட காரணிகளைக் கருத்திக் கொண்டும், பெட்ரோல் பங்க்கள் வெகுவாகக் குறைந்துவிடும். 2024-ல் ஒரு பேரல் பெட்ரோல் விலை வெறும் 25 அமெரிக்க டாலராகக் குறையும், 2030-க்குள் உலகில் எண்ணெய் தொழில் முடங்கிப் போகும் என்று குறிப்பிட்டுள்ளார்.

பெட்ரோல் டீசல் இவற்றின் பயன்பாட்டுக்கு மாற்று ஏற்பாடாக, தானியங்கி எலக்ட்ரிக் கார்களின் பயன்பாடு அதிகரிக்கும் என்று கூறுகிறார் டோனி செபா.

ALSO READ:  திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending