January 24, 2025, 6:28 AM
23.5 C
Chennai

வீட்டு வாடகை தராததால் அடித்து நொறுக்கிய உரிமையாளர்!

This image has an empty alt attribute; its file name is north-indians.jpg

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் தினக்கூலிகள், இங்கு பணிபுரியும் வட மாநிலத்தவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் வீட்டு வாடகை கொடுக்காததால், திருப்பூரில் வட மாநிலத் தம்பதியர்களை வீட்டின் உரிமையாளர் தாக்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லூரை அடுத்த பரமசிவன்பாளையத்தைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (60). இவருக்குச் சொந்தமாக உள்ள 30 வீடுகளில், கிட்டத்தட்ட 90 வட மாநிலத் தொழிலாளர்கள் வாடகைக்கு வசித்து வருகின்றனர்.

This image has an empty alt attribute; its file name is north-indians-1.jpg

இதில் ஒடிசாவை சேர்ந்த பிஜய் பார்ஜோ – சிபானி தம்பதி வேலைக்கு செல்ல முடியாததால் வாடகை கொடுக்க முடியாத சூழலில் இருந்துள்ளனர். ஆனால் வீட்டின் உரிமையாளர் பாலசுப்ரமணியன், `வாடகை கொடுக்கலைன்னா தண்ணி, கரன்ட் எல்லாத்தையும் கட் பண்ணிடுவேன்’ எனத் தரக்குறைவாக பேசி தாக்கியுள்ளார்.

இதுகுறித்து அந்த தம்பதி கண்ணீர் மல்க நடுரோட்டில் நின்றபடி வீடியோவாக பேசி அதை பேஸ்புக்கில் பதிவிட்டனர். மேலும், அருகிலிருந்த வடமாநில நண்பர்களோடு சென்று பெருமாநல்லூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கின்றனர்.

This image has an empty alt attribute; its file name is north-indians-2.jpg

புகாரின் அடிப்படையில் உரிமையாளரான பாலசுப்பிரமணியன் (60), அவருடைய மனைவி புஷ்பா (55) மற்றும் மருமகன் செந்தில் (34) ஆகிய மூவர் மீதும் போலீஸார் 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்திருக்கின்றனர்.

ALSO READ:  ஃபெங்கல் புயல்: வட தமிழகத்தில் கன மழை! எச்சரிக்கை நடவடிக்கைகள்!

இதுகுறித்து ஏற்கனவே புகார் வந்த நிலையில் போலீசார் உரிமையாளர் பாலசுப்ரமணியனை கண்டித்துள்ளனர். ஆனால் அதையும் மீறி அவர் வடமாநில தம்பதியரை தாக்கியது குறிப்பிடத்தக்கது.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜன.24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Ind Vs Eng T20: வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி!

இந்தியா இங்கிலாந்து முதல் டி-20 ஆட்டம்- கொல்கொத்தா-22 ஜனவரி 2025

பஞ்சாங்கம் ஜன.23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜன.22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

மதக் கலவரத்தை தூண்டும் திமுக.,? இந்து முன்னணி கண்டனம்

தமிழகத்தில் மதக்கலவரத்தை தூண்டுகிறதா திமுக. இன்று கேள்வி எழுப்பி, திருப்பரங்குன்றத்தில் திமுக...