January 19, 2025, 9:01 AM
25.7 C
Chennai

பாவம்.. கஷ்டப் படுறாங்கன்னு… ஆளுக்கு ஒரு ‘பெக்’ சரக்கு தானம் செய்த இளைஞர்!

குடிமகன்களுக்கு ஆளுக்கு ஒரு பெக் மது தானம் செய்த இளைஞர்.

ஏப்ரல் 30 வரை லாக்டௌன் தொடரும் என்று அறிவித்துள்ளார்கள். அதனால் ஹைதராபாத் முதல் அனைத்து நகரங்களிலும் வந்தேறிய கூலிகளின் பசியை தீர்ப்பதற்கு அன்னதானங்கள் நடந்து வருகின்றன.

ஆனால் நேற்று ஒரேடியாக குடிமகன்களுக்கு மதுவை ஊற்றி அவர்களின் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் பெற்றார் ஒரு இளைஞர்.

லாக்டௌன் பின்னணியில் அனைத்து மதுக்கடைகளும் மூடி உள்ளதால் குடிமகன்கள் படும் அவஸ்தைகளை அடையாளம் கண்ட ஒரு இளைஞர் அவர்கள் எர்ரகட்டா பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்கு க்யூவில் நிற்பதை அறிந்து கொண்டார். அதனால் அந்த இளைஞர் லிக்கர் தானத்தைச் செய்ய முன்வந்தார்.

சாலை அருகில் வசிக்கும் கூலிகள் மற்றும் பிறருக்கு அவர் இலவசமாக மதுவை பகிர்ந்து அளிக்கும் காட்சி வைரலாகி வருகிறது.

இந்த சம்பவம் ஹைதராபாத்தில் பாத்தபஸ்தி சம்பாபேட்டையில் நடந்தது. சம்பாபேட்டையில் ஒயின் ஷாப்புகளைச் சுற்றிலும் அலைந்தபடியே எப்போது கடைகளைத் திறப்பார்கள் என்று எதிர்பார்த்து ஏங்கி இருக்கும் குடிமகன்களுக்கு குமார் என்ற உள்ளூர் இளைஞர் ஒவ்வொருவருக்கும் ஒரு பெக் மதுவை ஊற்றி அவர்களின் தாகத்தை தீர்த்தார். சுமார் 10 ஃபுல் பாட்டில்கள் இவ்வாறு ஊற்றியதாக கூறுகிறார்கள்.

ALSO READ:  திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் காப்பு கட்டி கந்த சஷ்டி விழா தொடக்கம்!

மதுபானம் பெற்றவர்களில் பெண்கள் கூட அதிக அளவில் இருந்தது விசேஷம்.

இந்த சமயத்தில் மதுவை அனைவருக்கும் பகிர்ந்தளித்த இளைஞனை அவனுடைய உதார குணத்திற்கு குடிமகன்கள் அனைவரும் வணங்கி நன்றி கூறிச் சென்றார்கள்.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜன.19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை படிபூஜை நிறைவு; ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு!

சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் தற்போது மண்டல, மகர விளக்கு பூஜை வழிபாடுகள் விழாக்கள் முடிந்து மகரம் மாதபூஜை வழிபாடுகள் ஐயப்பனுக்கு நடந்து வருகிறது

சபரிமலை பெருவழிப்பாதை மூடல்!

கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தையாய் நினைத்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் பயணித்து வந்த சபரிமலை பெருவழிப் பாதை நடை தற்போது மூடப்பட்டதால்

இன்று நெய் அபிஷேகம், நாளை தரிசனத்துடன் மகரவிளக்கு கால வழிபாடு நிறைவு!

பக்தர்கள் சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்யலாம் என்ற நிலையில், இன்று காலை நெய்யபிஷேகத்துக்காக பக்தர்கள் கூட்டம் மிக அதிகமாகவே இருந்தது

பஞ்சாங்கம் ஜன.18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.