நட்பாகவே பிரிந்துவிட்டாராம்… விவாகரத்து பெற்ற நடிகையின் விளக்கம்!

Published:

simran kanna - 2026

கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்ற சிம்ரன் கன்னா.

அண்மையில் திரைத் துறையில் உறவுகளெல்லாம் நீர்க்குமிழிகளாக மாறி வருகின்றன. எப்போது சேர்ந்து வாழ்வார்களோ… எப்போது பிரிந்து போவார்களோ தெளிவே கிடைப்பதில்லை. புதிதாக மற்றுமொரு நடிகையும்கூட இதையே செய்துள்ளார்.

தெலுங்கு திரைத்துறையில் இந்த விவாகரத்து நாகரீகம் மிகவும் வளர்ந்து விட்டது. மனோஜ், ஸ்வேதா பாசு, அமலாபால் போன்றவர்கள் இதுவரையில் விவாகரத்து வாங்கி விட்டார்கள்.

புதிதாக நடிகை சிம்ரன் கூட கணவரிடமிருந்து விவாகரத்து பெற்றுள்ளார். சிம்ரன் என்றால் நம் ஹீரோயின் சிம்ரன் அல்ல… பாலிவுட் சீரியல் நடிகை சிம்ரன் கன்னா.

simran khanna - 2026

‘யே ரிஸ்தா க்யா கேஹ்லாதா ஹை’ சீரியலில் காயத்ரியாக நடிகை சிம்ரன் நடித்து ரசிகர்களிடமிருந்து நல்ல ஆதரவை பெற்றுள்ள பாப்புலர் நடிகையாக மாறினார். இன்னும் சில ஹிந்தி சீரியல்களிலும் நடித்து மகிழ்வித்தார்.

புதிதாக மன வேறுபாட்டால் கணவரிடமிருந்து சிம்ரன் கன்னா பிரிந்து விவாகரத்து பெற்றுள்ளார். தாங்கள் இருவரும் நட்பாகவே பிரிந்து உள்ளோம் என்றார். இருவருக்கும் இடையில் எப்படிப்பட்ட பகையும் இல்லை என்றும் தம் வழிகள் வேறு வேறு ஆதலால் பிரிந்து விட்டோம் என்றும் சிம்ரன் கூறியுள்ளார். மேலும் தன் மகன் தன் கணவரிடமே இருப்பான் என்றும் தெளிவுபடுத்தியுள்ளார் சிம்ரான் கன்னா.

ALSO READ:  டெட் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பில் உடனடி சட்ட நிவாரணம் தேவை!
ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img