December 6, 2025, 4:27 AM
24.9 C
Chennai

கொரோனா பேரபாயத்தில் சென்னை: இன்றும் 174 பேருக்கு உறுதியான தொற்று!

tamilnaducorona
tamilnaducorona

சென்னை கொரோனா பேரபாயத்தில் இருக்கிறது. சனிக்கிழமை இன்று ஒரே நாளில் 174 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது சென்னைவாசிகளை கலவரப் படுத்தியுள்ளது.

தமிழகத்தில் இன்று புதிதாக 231 பேருக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப் பட்டது. இந்த 231 பேரில் சென்னையில் மட்டும் 174 பேருக்கு பாதிக்கப் பட்டிருக்கிறது. இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,257 ஆக அதிகரித்துள்ளது.

இந்த பாதிப்பு, தமிழகத்தின் ஒட்டு மொத்த கொரோனா பாதிப்பில் 46 சதவீதம். நாளுக்கு நாள் அதிகரிக்கும் பாதிப்பால் சென்னையில் சோதனை அதிகரிக்கப் பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இன்று மேலும் 231 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் இன்று வெளியான சுகாதாரத் துறை அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,757 ஆகவும், உயிரிழப்பு எண்ணிக்கை 29 ஆகவும் உயர்ந்துள்ளது.

தமிழக சுகாதாரத்துறை சார்பில் வெளியான அறிக்கையில், தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 231 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதில் 158 ஆண்கள், 72 பெண்கள், ஒரு திருநங்கைக்கு புதிதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2757 ஆக அதிகரித்துள்ளது.

tn color zone may2
tn color zone may2

இன்று ஒரே நாளில் 10,127 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன. இன்று அரியலூரில் 18 பேரும், காஞ்சிபுரத்தில் 13 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையைச் சேர்ந்த 76 வயது மூதாட்டி உயிரிழந்துள்ளார். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 29 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 1,341 ஆக உள்ளது.

district wise may2
district wise may2

தற்போது 1,384 பேர் சிகிச்சையில் உள்ளனர். வீட்டுக் கண்காணிப்பில் 35,418 பேரும், அரசு கண்காணிப்பில் 40 பேரும் உள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை பதிவான பாதிப்புகளில், 12 வயதுக்கு உட்பட்டவர்கள்-159 பேர், 13 முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்கள்-2318 பேர், 60 வயதை கடந்தவர்கள்-280 பேர். – என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories