கரடுமுரடான ஆடுகளத்தில் ஆடும் டெஸ்ட் மேட்ச் மாதிரி… கங்குலி சொன்ன உவமை! எதற்கு தெரியுமா?!

04 Sep 13 Saorav ganguliy

கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுத்தியுள்ள பாதிப்பு, கரடு முரடான அபாயகரமான ஆடுகளத்தில் டெஸ்ட் மேட்ச் விளையாடுவது மாதிரி உள்ளது என்று தன் கிரிக்கெட் துறையை ஒப்பிட்டு கொரோனா பாதிப்பு குறித்து விளக்கியுள்ளார் இந்திய முன்னாள் கிரிக்கெட் கேப்டன் சௌரவ் கங்குலி !

கொரோனா வைரஸ் தொற்று உலகெங்கிலும் புரட்டிப் போட்டு வருகிறது. உலகின் மற்ற நாடுகளை ஒப்பிட்டுப் பார்க்கும் போது அவ்வளவு பெரிய பாதிப்பு இல்லை என்றாலும், இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

கொரோனா பாதிப்பு தெரியத் தொடங்கியதும், உலக நாடுகளின் பாதிப்புகளைப் பார்த்து விட்ட இந்திய அரசு, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து இதிய மக்களைக் காப்பாற்ற உடனடி ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்தது. இதனால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கினர். முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டு, இன்றுடன் 40 நாட்கள் நிறைவடையும் நிலையில், மக்களின் ஒத்துழைப்பு மேலும் தேவை என்று அரசு கருதுகிறது. இதனால் மேலும் இரு வாரங்களுக்கு ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப் பட்டிருக்கிறது.

தற்போது பெரு நகரங்களில் வேகமாகப் பரவி வருகிறது கொரோனா தொற்று. கொரோனாவின் சமூகப் பரவல் சங்கிலி பெரிதானால், மேலும் பலருக்கு பாதிப்பு ஏற்படக் கூடும் என்பதால், மத்திய மாநில அரசுகள் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

11 May 22 ganguly

இந்நிலையில் தற்போதுள்ள நிலை கரடு முரடான ஆடுகளத்தில் டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்கு சமம் என்று கொரோனா குறித்த கருத்தை வெளிப்படுத்தியுள்ளார் சௌரவ் கங்குலி.

இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘தற்போதுள்ள சூழ்நிலை அபாயகரமான ஆடுகளத்தில் டெஸ்ட் போட்டி விளையாடுவது போல் உள்ளது. சீமிங் மற்றும் ஸ்பின்னிங் ஆகியவற்றிற்கு பந்து நன்றாக துணைபோகும். பேட்ஸ்மேன் சற்று தவறு செய்தாலும் அவ்வளவுதான். பேட்ஸ்மேன் ரன் அடிக்க வேண்டும். அதேநேரம் சிறு தவறு கூட செய்யாமல் கவனமாக செயல்பட வேண்டும். அப்போதுதான் டெஸ்ட் போட்டியை வெல்ல முடியும். தற்போதுள்ள சூழ்நிலை மிகவும் கடினமானது. ஆயினும் ஒருங்கிணைந்து இதில் வெல்வோம் என்ற நம்பிக்கை உள்ளது’’ எனக் கூறியுள்ளார்.

அவரவர் துறை சார்ந்து, அவரவருக்குத் தெரிந்த உவமையில் இப்போது கொரோனா குறித்த நாட்டின் சூழ்நிலையை விளக்க முயற்சி செய்து வருகிறார்கள் சிலர். எல்லாம் ஒரு விழிப்பு உணர்வுக்காகத்தான்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

திமுக., அதிமுக., யார் வென்றால் என்ன நடக்கும்?

தோற்றால் அண்ணாமலையின் செல்வாக்கு, கட்சிக்குள் பெருகும். கட்சி முழுமையாக அவர் கட்டுப்பாட்டுக்குள் போகும். தமிழக பாஜக வளர அது உதவும்.

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

Topics

திமுக., அதிமுக., யார் வென்றால் என்ன நடக்கும்?

தோற்றால் அண்ணாமலையின் செல்வாக்கு, கட்சிக்குள் பெருகும். கட்சி முழுமையாக அவர் கட்டுப்பாட்டுக்குள் போகும். தமிழக பாஜக வளர அது உதவும்.

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

Entertainment News

Popular Categories