கோயில் நிதி அரசு செலவுக்கா? இந்து இயக்கங்களின் எதிர்ப்பால் திரும்பப் பெறப்பட்ட சுற்றறிக்கை!

hrnce office e1561694728558
hrnce office e1561694728558

கோயில்களிலிருந்து நிதி கோரப்பட்ட சுற்றறிக்கையை அரசு திரும்பப் பெற்றுக் கொண்டது.

தமிழகத்தின் 47 கோயில்களிலிருந்து ரூ.10 கோடியை எடுத்து முதல்வர் நிவாரண நிதிக்கு கொடுக்க உத்தரவிட்ட இந்து சமய ஆணையாளரின் உத்தரவுக்கு தடை கோரி இந்து முன்னணி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப் பட்டது. இந்து சமய அறநிலையத்துறை ஆணையாளர் ஆலய நிதியை எடுக்க உத்தரவிட ஆணையாளருக்கு உரிமை இல்லை என்றும் ஆணையாளரின் உத்தரவுக்கு தடை விதித்தும், உத்தரவை திரும்பப் பெற்று அது சம்பந்தமாக வரும் 8.5.2020, அன்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவும் உத்திரவிட்டுள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.

தமிழகத்தில் உள்ள அம்மா உணவகங்களில் பொதுமக்களுக்கு தினசரி இலவசமாக உணவளிக்க தமிழக அரசு அறநிலையத்துறை மூலமாக முயற்சி மேற்கொண்டு, தமிழக அறநிலையத்துறை முதன்மை செயலரும் ஆணையாளருமான பணீந்தர ரெட்டி, பழனி, திருச்செந்தூர் ஆலய செயல் அலுவலர்கள் மற்றும் அனைத்து மண்டல இணை ஆணையாளர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியிருந்தார்.

அதில் கோயில் நிதியிலிருந்து – பெரிய கோயில்களிலிருந்து ரூ.10 கோடி நிதியை, முதலமைச்சர் பேரிடர் நிவாரண நிதிக்கு அனுப்பி வைக்க கோரியிருந்தார்.

hrnce statement1
hrnce statement1
hrnce statement2
hrnce statement2

அறநிலையத்துறையின் இந்த சுற்றறிக்கைக்கு பல்வேறு இந்து அமைப்புகள், ஆலய ஆன்மீகக் குழுக்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்தன. இந்து சமய அறநிலையத்துறை சட்டத்தில் இது போன்ற நடவடிக்கை சட்ட விரோதம் என்று தெரிவிக்கப் பட்டதால், அறநிலையத்துறையின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் வழக்குதொடுக்கப் பட்டது.

இது தொடர்பாக திருக்கோயில் பக்தர்கள் பாதுகாப்பு பேரவையின் டி.ஆர்.ரமேஷ் தெரிவித்த போது…

இன்று மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்ற – பொது நல வழக்கு அமர்வு முன்பாக – கோயில் பணம் ₹10 கோடி முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்குவதை எதிர்த்து என் வழக்கு வந்தது.

விசாரித்த மாண்புமிகு நீதிபதிகள் வரும் வெள்ளிக்கிழமை வரை ஆணையர் தம் சுற்றறிக்கை மீது எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளக் கொள்ளக் கூடாது என்று உத்தரவிட்டு, அரசு நீதிமன்றம் முன்பாக தெரிவித்த படி 22.04.2020 தேதியிட்ட சுற்றறிக்கை திரும்பப் பெறப் படுகிறது என்று பிரமாணம் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்திரவிட்டுள்ளது.

இளம் வழக்கறிஞர்கள் நிரஞ்சன் ராஜகோபால், அபினவ் பார்த்தசாரதி, பிரஹலாத் பட் ஆகியோருக்கு மிக்க நன்றி… என்று குறிப்பிட்டார் டி.ஆர்.ரமேஷ்.

hrnce statement
hrnce statement

இதை அடுத்து அறநிலையத் துறை செயலரின் சுற்றறிக்கை இன்று திரும்பப் பெறப்பட்டுள்ளது. இதனால் கோயில்கள் மூலமாக ரூ. 10 கோடி வழங்கும் நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

Topics

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

Entertainment News

Popular Categories