December 7, 2025, 12:28 AM
25.6 C
Chennai

சென்னையில் மட்டும் டாஸ்மாக்க திறக்க மாட்டாங்களாம்..! அந்த ‘ரகசிய’ காரணம் என்ன தெரியுமா?!

TASMAC
TASMAC

மே 7-ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்படும் என அறிவித்துள்ள தமிழக அரசு, சென்னையில் மட்டும் திறக்கப்பட மாட்டாது என திடீரென தெரிவித்துள்ளது.

கொரானா ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பிறகு கடந்த 42 நாள்களில் அரசுக்கு மதுக்கடைகள் மூலம் 40 ஆயிரம் கோடி வருமான இழப்பு ஏற்பட்டதாம். இந்நிலையில் பக்கத்து மாநிலமான கர்நாடகம், ஆந்திரத்தில் மதுக்கடைகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டதால் அதையே காரணமாக காட்டி தமிழகத்தில் மதுக்கடைகள் திறக்கப்படும் என அறிவித்தது.

ஆனால் அரசின் இந்த முடிவுக்கு அரசியல் கட்சிகள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், பத்திரிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பு எழுந்தது. இந்நிலைமையை சமாளிக்க முடிவு செய்த தமிழக அரசு, அதிகாரி ஒருவரை சென்னையில் அதிக தொற்று ஏற்பட்டுள்ளதாக அறிக்கை வெளியிடச் சொல்லி, இதை பதில் காரணம் காட்டி சென்னையில் மதுக்கடைகள் திறக்கப்படாது என்ற அறிவிப்பையும் வெளியிட்டதாக சொல்கின்றனர்.

இதுதவிர மதுக்கடைகளில் பணியாற்றும் பணியாளர்களே மதுக்கடைகளை திறக்க எதிர்ப்பு தெரிவித்து சங்கத்தின் சார்பில் அறிக்கைகள் வெளியிட்டார்களாம். கோயம்பேடு சந்தையி்ல் அதிகக் கூட்டம் கூடியதால் கொரோனா மையமாக கோயம்பேடு மாறியதைப் போல், தொற்று அதிகரிக்க மதுக்கடைகள் பெரும் காரணமாக அமைந்துவிடும் என மதுக்கடை பணியாளர் சங்கத்தினர் அரசை எச்சரித்தனராம். மேலும் இதுதொடர்பாக முதலமைச்சரின் அலுவலகத்திற்கு நேரில் சென்றும் முறையிட்டார்களாம்.

அடுத்தடுத்து வந்த எதிர்ப்புகளைத் தொடர்ந்து, அரசு இந்த அவசர முடிவை எடுத்ததாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், மதுக்கடைகளை திறப்பது நியாயமான செயல் அல்ல என்று நீதிபதிகள் சிலர், அதிருப்தி தெரிவித்துப் பேசியதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் பணிபுரியும் வழக்கறிஞர்கள் கூறினராம்.

மதுக்கடைகளை திறக்கும் அறிவிப்பிற்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் பெயரில் சில வழக்கறிஞர்கள் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.

இந்த வழக்கு இன்றோ அல்லது நாளையோ அவசர வழக்காக விசாரிக்கப்பட்டால் நிச்சயம் தமிழக அரசுக்கு எதி்ராகவே தீர்ப்பு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக போலீஸ் தரப்பிலும் சுட்டிக் காட்டப்பட்டதாம்.

இதையடுத்தே அவசரமாக சென்னைக்கு மட்டும் இந்த அறிவிப்பை வெளியி்ட்ட தமிழக அரசு, இன்னும் இரு தினங்களில் தமிழகம் முழுவதும் கடைகள் திறக்கப்படாது என்ற அறிவிப்பை வெளியிட்டாலும் ஆச்சர்யம் ஏதுமில்லை என்கின்றனர் வழக்கறிஞர்கள்.

  • சதானந்தன், சென்னை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

Topics

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Entertainment News

Popular Categories