December 5, 2025, 4:29 PM
27.9 C
Chennai

கொரோனா: இன்று 798 பேருக்கு உறுதி; இதுவரை 2051 பேர் குணமடைந்தனர்!

corona vigil today
  • தமிழகத்தில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 2,000ஐ தாண்டியது!
  • தமிழகத்தில் இன்று கொரோனா பாதித்த 92 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்
  • தொற்றில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 2,051ஆக உயர்ந்தது!

தமிழக சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில், கொரோனா தொற்று, இன்று 798 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 8002 பேருக்கு இந்த வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்று வரையில் 5895 பேர் வைரஸ் தொற்றுக்கு பாதிக்கப்பட்டு தற்போது சிகிச்சையில் உள்ளனர். இன்று கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட 798 பேரில் 514 பேர் ஆண்கள், 284 பேர் பெண்கள். இதுவரை வைரஸ் தொற்று உறுதி செய்யப் பட்டவர்களில், 5421 பேர் ஆண்கள்; 2579 பேர் பெண்கள்.

கொரோனா வைரஸ் தொற்று நோய்த் தாக்குதல் குறித்து, இன்று 11 ஆயிரத்து 584 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று 92 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.இதை அடுத்து இதுவரை வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 2051 பேர் சிகிச்சை முடிந்து வீடு களுக்கு திரும்பியுள்ளனர்.

kanyakumari corona stops - 2025

தற்போது தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில் 4273 பேர் சிகிச்சையில் வைக்கப்பட்டுள்ளனர். இன்று 6 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து 53 பேர் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்கு தமிழகத்தில் உயிரிழந்துள்ளனர்.

இன்று பல்வேறு உடல்நல கோளாறுகள் காரணமாக சென்னையைச் சேர்ந்த 50 வயது ஆண், 67 வயது பெண்மணி, கடலூரைச் சேர்ந்த 32 வயது பெண், சென்னையைச் சேர்ந்த 36 வயது பெண், சென்னையைச் சேர்ந்த 66 வயது ஆண், மற்றும் 65 வயதான கன்னியாகுமரியை சேர்ந்த ஆண் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்திலேயே அதிகபட்சமாக சென்னையில் 538 பேருக்கு வைரஸ் தொற்று இன்று உறுதி செய்யப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டத்தில் 90 பேருக்கும் திருவள்ளூர் மாவட்டத்தில் 97 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது! அரியலூரில் 33 பேருக்கும் காஞ்சிபுரத்தில் 8 பேருக்கும் திருவண்ணாமலையில் 10 பேருக்கும் இன்று நோய் உறுதி செய்யப்பட்டது

மதுரை, ராமநாதபுரத்தில் தலா 4 பேருக்கும், தஞ்சாவூர் தூத்துக்குடியில் தலா மூன்று பேருக்கும், தர்மபுரியில் இருவருக்கும், விருதுநகர் வேலூர் ராணிப்பேட்டை கன்னியாகுமரி திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவருக்கும் இன்று கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories