December 6, 2025, 3:30 AM
24.9 C
Chennai

ஊரடங்கு: திருப்பதி உண்டியலில் ஒரே நாளில் 2 லட்சம் வரவு!

thirupathi 2

திருப்பதியில் பக்தர்கள் வருகை இல்லாத ஊரடங்கு நேரத்திலும் கண் கண்ட கடவுளான ஏழுமலையானுக்கு ஒரே நாளில் 2 லட்சம் உண்டியல் காணிக்கை கிடைத்துள்ளது. உலக பிரசித்திப் பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து தங்களது வேண்டுதலுக்கு ஏற்ப உண்டியலில் காணிக்கை செலுத்தி வருவது வழக்கம். ஆனால் கடந்த 50 நாட்களுக்கு மேலாக கொரோனா பரவலை தடுப்பதற்காக கோயிலில் பக்தர்கள் அனுமதிக்கப்படாமல் உள்ளனர்.
இருப்பினும் சுவாமிக்கு நடைபெறக்கூடிய நித்திய பூஜைகளான சுப்ரபாதம் முதல் ஏகாந்த சேவை வரை தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. அவ்வாறு சுப்ரபாத சேவை தொடங்கியவுடன் உண்டியல் வைக்கப்பட்டு ஏகாந்த சேவைக்கு பிறகு மீண்டும் உண்டியலை எடுத்து பரக்காமணிக்கு கொண்டு செல்லப்பட்டு வருகிறது.
ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் அனுமதிக்கப் படாவிட்டாலும், திருமலையில் பணிபுரியக்கூடிய அர்ச்சகர்கள், தேவஸ்தான பணியாளர்கள், போலீசார், விஜிலன்ஸ் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தங்கள் பணியை செய்து வருகின்றனர். அவ்வாறு பணியில் ஈடுபடும் அர்ச்சகர்கள், அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கோயிலில் சுவாமி தரிசனம் செய்து உண்டியலில் காணிக்கை செலுத்தி வருகின்றனர். இது தவிர அவ்வப்போது அறங்காவலர் குழு உறுப்பினர்களும் சுவாமி தரிசனம் செய்து உண்டியலில் காணிக்கை செலுத்தி வருகின்றனர். இதன் காரணமாக பக்தர்கள் இல்லாவிட்டாலும் தினந்தோறும் உண்டியலில் 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை காணிக்கையாக ஏழுமலையானுக்கு வந்தபடி உள்ளது. இதில் ஒரு நாள் மட்டும் ₹2 லட்சம் காணிக்கையாக ஏழுமலையானுக்கு வந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories