January 25, 2025, 8:44 AM
23.2 C
Chennai

இளநீர் நிறைய இருக்குங்க… ஆனா… வாங்கத்தான் ஆள் இல்லைங்க..!

மதுரை நகரில் பல இடங்களில் வண்டிகளில் விற்பனைக்காக இளநீர் இருந்தும், வாங்கத்தான் பொதுமக்கள் வருவதில்லை என இளநீர் வியாபாரி வருத்தம் தெரிவித்தார்.

மதுரை நகரில் பல இடங்களில் வண்டிகளில் இளநீர் அதிகளவில் வைக்கப்பட்டிருந்தாலும், கோடை காலம் கடுமையான வெயில் இருந்தும், இளநீர் வாங்கத்தான் ஆட்கள் வரவில்லை. மேலும், இளநீர்களை மொத்த வியாபாரிகள் மதுரை புறநகர் பகுதிகள், அய்யம்பாளையம், நத்தம், வத்திப்பட்டி, திருபுவனம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து இளநீரை வாங்கி , லாரிகள் மூலமாக மதுரைக்கு கொண்டு வரப்பட்டு சில்லரை வியாபாரிகளுக்கு இவர்கள் விற்பனை செய்கின்றனர்.

இதை, சில்லரை வியாபாரிகள் விலைக்கு வாங்கி, கை வண்டிகள் மூலம் பொதுமக்களுக்கு ரூ. 30, 40, 50 ஆகிய விலைகளில் விற்பணை செய்து வருகின்றனர். ஆனால், கடந்த சில நாட்களாக பொதுமக்களிடம் நிலவும் பண பற்றாக்குறையால் நடுத்தர, ஏழை மக்கள் பலர் கைவண்டிகளில் விற்பனை செய்யப்படும் இளநீரை விலைக்கு வாங்க தயங்குகின்றனர்.

ALSO READ:  கும்பமேளா செல்ஃபி, அரசியலமைப்பு 75ம் ஆண்டு... மனதின் குரலில் பிரதமர் மோடி!

கடந்த ஆண்டு, மதுரை நகர் பகுதிகளில் இளநீர் விற்பனை கொடி கட்டிபறந்ததாம், ஆனால் பல நாட்களாக மதுரை நகரில் இளநீர் விற்பனை மந்தமாக உள்ளது. வாங்கிய விலைக்கே, இளநீரை விற்பனை செய்யலாம் என்றாலும் வாங்கத்தான் ஆள் இல்லை என்றார் கைவண்டி இளநீர் விற்பனையாளர் மணி.

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

டங்ஸ்டன் அரசியல்; ஸ்டாலின் கருத்துக்கு ராம சீனிவாசன் பதிலடி!

டங்ஸ்டன் திட்டத்தை அரசியலாக்க விரும்பவில்லை அனைத்துக் கட்சியினருமே போராடி இருக்கின்றனர் என்று

பஞ்சாங்கம் ஜன.25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டங்க்ஸ்டன் திட்டத்தை வரவிடாமல் செய்ததில்… யாருக்கு வெற்றி?!

டங்க்ஸ்டன் திட்டத்தை வரவிடாமல் தடுத்ததில் யாருக்கு முழு வெற்றி போகவேண்டும் என்று பெரும் கூத்து நடந்துகொண்டிருக்கிறது.

திருப்பரங்குன்றத்தில் பாஜக., எம்.எல்.ஏ., இந்து முன்னணி தலைவர் ஆய்வு!

இந்துமுன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், பாஜக சட்டமன்ற குழு தலைவர் திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் நயினார்நாகேந்திரன் ஆகியோருடன்

தினசரி பெரியவா தியானம்: நூல் பெற..!

ரா. கணபதி அண்ணா, மகா பெரியவாளின் கருத்துகளைத் தொகுத்து அவற்றை தெய்வத்தின் குரல் என்று ஏழு பகுதிகள் அடங்கிய நூல் தொகுப்பாக வெளியிட்டுள்ளதை அனைவரும் அறிவோம்.