சேலம் அரசு மருத்துவமனை! கர்ப்பிணி பெண்கள் அதிகரிப்பு! தினமும் 55 குழந்தைகள் பிறப்பு!

baby born 1 - 2026

சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு வரும் கர்ப்பிணி பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி சராசரியாக நாள் தோறும் 55 குழந்தைகள் பிறப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவலை தடுக்க மே 31ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. சேலத்தில் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உள் நோயாளிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது.

மேலும், வெளி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதும் நிறுத்தப்பட்டது. குறிப்பாக அவசர கால சிகிச்சைகள் மட்டுமே அளிக்கப்பட்டு வந்தது. இதனால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

சேலம் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சையில் இருந்த ஒரு சிலரின் உடல்நிலை நன்றாக இருந்ததால், மருந்து, மாத்திரைகள் வழங்கி வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்களின் உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டால் மட்டுமே சிகிச்சைக்கு வருவதற்கு அறிவுறுத்தப்பட்டது.

இந்நிலையில் கொரோனா தொற்று ஊரடங்கின் போது கர்ப்பிணி பெண்கள் சிகிச்சைக்கு வருவதற்கு எவ்வித தடையும் இல்லை என அறிவுறுத்தப்பட்டது. இதனால் அரசு மருத்துவமனையில் வழக்கம் போல் கர்ப்பிணிகளுக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் ஒரு சில தனியார் மருத்துவமனைகளில் கர்ப்பிணி பெண்களுக்கு சிகிச்சை அளிப்பதை தவிர்த்து வந்தனர். இதனால் அரசு மருத்துவமனையை தேடி வரும் கர்ப்பிணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இதுகுறித்து சேலம் அரசு மருத்துவமனை மகப்பேறு மருத்துவர்கள் கூறியதாவது: கொரோனா தொற்று காரணமாக பெரும்பாலான தனியார் மருத்துவமனைகள் கர்ப்பிணி பெண்களுக்கு சிகிச்சை அளிப்பதை தவிர்த்து வருகின்றனர். இதனால் நகரம் மற்றும் கிராமங்களில் உள்ளவர்கள் அரசு மருத்துவமனையை நோக்கி வரத்தொடங்கியுள்ளனர்.

சேலம் அரசு மருத்துவமனையில் நாளென்றுக்கு சாராசரியாக 25 முதல் 35 குழந்தைகள் பிறக்கும். தற்போது, கர்ப்பிணி பெண்கள் வருகை அதிகரிப்பால் நாளொன்றுக்கு சராசரியாக 55 குழந்தைகள் பிறக்கிறது. இவர்களில் 90 சதவீதம் பேருக்கு சுகப்பிரசவமே நடக்கிறது. குழந்தைகளின் உடல்நலமும், தாய்மார்களின் உடல்நலமும் நன்றாக உள்ளது.

இவர்களுக்கு தேவையான அனைத்து வகையான சிகிச்சைகளும் உடனடியாக அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது, அரசு மருத்துவமனையில் அவசர கால சிகிச்சைகள் மற்றும் அறுவை சிகிச்சைகள் மட்டுமே நடைபெறுகிறது. கொரோனா பரிசோதனைகள் செய்த பிறகு, தொற்று இல்லை என உறுதியான பிறகே இந்த சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு மகப்பேறு மருத்துவர்கள் கூறினர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

Topics

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

Entertainment News

Popular Categories