“பாம்பு கடித்ததா, இல்லையா?”

947129 585338794830241 865216797 n - 2026

“பாம்பு கடித்ததா, இல்லையா?”

(பெரியவாளின் பாம்புக்கடி வைத்தியம்) (ஒரு சிறு பதிவு)

சொன்னவர்;ஸ்ரீமடம் பாலு
தொகுப்பாசிரியர்;கோதண்டராம சர்மா.
தட்டச்சு;வரகூரான் நாராயணன்

கும்பகோணம் மடத்தில், ஸ்ரீசந்த்ரமௌளீஸ்வர
பூஜை முடிந்து,பக்தர்களுக்கு தரிசனம் கொடுத்துக்
கொண்டிருந்தார்கள்,பெரியவா.

ஸ்ரீமடத்துடன் தொடர்பு உடைய ஒரு குடியானவர்
பரபரப்புடன் வந்து பெரியவா காலில் விழுந்து,
“என் மகனைக் காப்பாத்துங்க,கடவுளே”
என்று கதறினார்.

“என்ன நடந்தது?” என்று அவரிடம் கேட்கச்
சொன்னார்கள்-பெரியவா.

குடியானவருக்கு ஒரே பையன்.அவன் உணவு
சாப்பிட்டுக் கொண்டிருந்த போது, ஒரு பாம்பு
அவன் உடம்பில் ஏறி,அப்பால் போயிருக்கிறது.
பையனுக்கு ஏற்பட்ட பயத்தில் மூர்ச்சை போட்டு
விழுந்திருக்கிறான்.பையனை, பாம்பு கடித்ததா,
இல்லையா? – என்பது தெரியவில்லை. பாம்புக்
கடிக்கு மந்திரிக்கும் வழக்கம் உண்டு. ஆனால் அந்த
மந்திரம் தெரிந்தவர் யாரும் அருகில் இல்லை.
என்ன செய்வது?

“சாமி தான் காப்பாத்தணும்….”

பெரியவா விபூதிப் பிரசாதம் வழங்கினார்கள்.

“பையன் நெத்தியிலே பூசு…”

“சரிங்க…”

“வீட்டிலே அரப்புப் பொடி இருக்கா?”

“இருக்கு”…என்று தலையை ஆட்டினார்.

“பையன் உதட்டைப் பிரிச்சு,வாயிலே அரப்புப்
பொடி போட்டு மெதுவா தடவி விடு.பையன்
கசக்கிறதுன்னு துப்பினா,பாம்பு கடிக்கல்லேன்னு
அர்த்தம்; தித்திக்கிறதுன்னு சொன்னா, பாம்பு
கடிச்சிருக்குன்னு அர்த்தம்.அதற்கு வைத்யம்
பண்ணணும். போய் அரப்பு கொடு….”

குடியானவர் ஓடிப்போய், பெரியவா சொன்னபடியே
செய்தார். பையனின் வாயில் அரப்பைப் போட்டதும்
“கசக்குது கசக்குது” என்று துப்பினான்.

“அப்பா! பாம்பு கடிக்கல்லே!…..

நிலைமை சரியானதும், அந்தப் பையனையும்
அழைத்துக் கொண்டு தரிசனத்துக்கு வந்தார்கள்,
குடியானவ தம்பதிகள்.

“வீட்டிலே, தினமும் நல்லெண்ணை தீபம் ஏற்று”
என்று அந்தப் பெண்ணிடம் பெரியவா கூறினார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories