April 26, 2025, 10:34 AM
33.1 C
Chennai

ஏழைகளுக்கான வருமான சான்றிதழை அரசு வழங்க வேண்டும்: அர்ஜுன் சம்பத் கோரிக்கை!

Secretariat
Secretariat

மத்திய அரசு, பொருளாதாரத்தில் பின் தங்கிய முற்பட்ட வகுப்பினருக்குக் கொண்டு வந்த 10 சதவீத இட ஒதுக்கீட்டை மறுதலிக்கும் விதமாக,தமிழக அரசு உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது குறித்து, இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் அறிக்கை ஒன்றில் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:

இரண்டு ஆண்டுகளுக்கு முன் மத்திய பாரதிய ஜனதா கட்சியின் அரசு, பொதுப்பிரிவில், ஏழைகளுக்கு அதாவது இட ஒதுக்கீட்டின் பலனை இதுவரை அனுபவித்திராத பொருளாதாரத்தில் நலிந்தோருக்காக, 10 சதவீத இட ஒதுக்கீட்டை அறிவித்தது.

அதை, பல மாநிலங்கள் அமல்படுத்தின தமிழகத்தில், இதுவரை அமலாக்கவில்லை. தமிழக அரசு பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை மக்களுக்கான இட ஒதுக்கீட்டை சலுகைகளை கொடுக்காமல் தாமதித்து வருகிறது. பல முறை இந்து மக்கள் கட்சி சார்பிலும் பொதுப் பிரிவைச் சார்ந்த பல்வேறு சமூக அமைப்புகளின் சார்பில், கோரிக்கை மனு அனுப்பினோம். எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

bpl
bpl

ஏழைகள் சமூகம் மிகவும் சிரமப்படும் வேளையில், எதற்காக இப்படி செய்கின்றனர் என்று தெரியவில்லை. தற்போது, மத்திய அரசு கொண்டு வந்துள்ள, அரசியல் சட்ட திருத்தப்படி, பொதுப்பிரிவில், பொருளாதாரத்தில் நலிந்தோருக்கான, ஏழைகளுக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டை தராமல், தமிழக அரசு தாமதித்து வருகிறது.

ALSO READ:  IPL 2025: மீண்டும் மும்பைக்கு எதிராக வென்ற பெங்களூர்

பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு வழங்கப்படும், வருமான சான்றிதழை, எந்த தாசில்தாரும் கொடுக்க வேண்டாம் என, இரு தினங்களுக்கு முன் உத்தரவிட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இது, ஏழைகளையும் பொது பிரிவினரையும் ஏமாற்ற வேண்டும் என்பதற்காக, உள்நோக்கத்துடன் செய்ததாக அனைவரும் கருதுகிறார்கள்.

பொதுப்பிரிவினர் சார்ந்த சமூக வழக்கறிஞர்கள், தயவு செய்து உடனடியாக, நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு எதிராக, சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்து மக்கள் கட்சியின் சார்பிலும் சட்டப்பூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கான சான்றிதழ்கள் நிறுத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து மக்கள் கட்சியின் சார்பில் அறப் போராட்டங்கள் நடைபெறும்.

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் இது விஷயத்தில் நேரடியாக கவனம் கொடுத்து தமிழகத்தில் பொதுப்பிரிவினர் ஏழை எளியோருக்கு இட ஒதுக்கீடு மற்றும் சலுகைகளை உடனடியாக வழங்க உத்தரவிட வேண்டும்.

மத்திய அரசு ஏழைகளுக்கான இட ஒதுக்கீட்டை அறிவித்த பின்பு பல மாநில அரசுகளும், மத்திய அரசும் இதை வெற்றிகரமாக இதனை செயல்படுத்தி வந்த போதும் தமிழகத்தில் மட்டும் இதை செயல்படுத்தாமல் தாமதிப்பது சரியானதல்ல.

ALSO READ:  காலமானார் மூத்த தேசபக்தர் குமரி அனந்தன்! தலைவர்கள் இரங்கல்!

எனவே உடனடியாக ஏழைகளுக்கான வருமான சான்றிதழ்களை வழங்க வேண்டாம் என்கின்ற உத்தரவை திரும்பப் பெற வேண்டும். தமிழகத்தில் பொருளாதார அடிப்படையில் பொதுப் பிரிவினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்கின்ற கோரிக்கையை முன் வைக்கின்றோம்… என்று தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்.26 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

IPL 2025: கடைசி இடத்தில் தொடரும் தோனியின் சிஎஸ்கே

ஐ.பி.எல் 2025 – சென்னை vs ஹைதராபாத் – எம்.ஏ. சிதம்பரம்...

காஞ்சி சங்கர மடத்தின் 71வது பீடாதிபதி தேர்வு!

காஞ்சி காமகோடி பீடாதிபதியின் ஆசீர்வாதத்துடன், கணேச சர்மா யஜுர்வேதம், சாமவேதம், ஷடங்காக்கள், தசோபநிஷத் மற்றும் சாஸ்திர படிப்புகளைத் தொடர்ந்து வருகிறார்.

‘இஸ்ரோ’ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் காலமானார்!

'இஸ்ரோ' முன்னாள் தலைவர் கி.கஸ்தூரி ரங்கன் தம் 84ம் வயதில், வயது மூப்பு காரணமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, பெங்களூருவில் ஏப்.25 இன்று காலமானார்.

பயங்கரவாதிகளின் முதுகெலும்பை முறிக்கத் தேவையான சக்தி..!

இந்நிலையில், நேற்று பீகார் மாநிலத்துக்குச் சென்றிருந்த பிரதமர் மோடி, அங்கே நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், காஷ்மீர் படுகொலைச் சம்பவத்தில்

Topics

பஞ்சாங்கம் ஏப்.26 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

IPL 2025: கடைசி இடத்தில் தொடரும் தோனியின் சிஎஸ்கே

ஐ.பி.எல் 2025 – சென்னை vs ஹைதராபாத் – எம்.ஏ. சிதம்பரம்...

காஞ்சி சங்கர மடத்தின் 71வது பீடாதிபதி தேர்வு!

காஞ்சி காமகோடி பீடாதிபதியின் ஆசீர்வாதத்துடன், கணேச சர்மா யஜுர்வேதம், சாமவேதம், ஷடங்காக்கள், தசோபநிஷத் மற்றும் சாஸ்திர படிப்புகளைத் தொடர்ந்து வருகிறார்.

‘இஸ்ரோ’ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் காலமானார்!

'இஸ்ரோ' முன்னாள் தலைவர் கி.கஸ்தூரி ரங்கன் தம் 84ம் வயதில், வயது மூப்பு காரணமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, பெங்களூருவில் ஏப்.25 இன்று காலமானார்.

பயங்கரவாதிகளின் முதுகெலும்பை முறிக்கத் தேவையான சக்தி..!

இந்நிலையில், நேற்று பீகார் மாநிலத்துக்குச் சென்றிருந்த பிரதமர் மோடி, அங்கே நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், காஷ்மீர் படுகொலைச் சம்பவத்தில்

IPL 2025: கோலி அதிரடி; பெங்களூருக்கு சிறப்பான வெற்றி!

பெங்களூரு அணியின் பந்துவீச்சாளர் ஹேசல்வுட் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இன்றைய ஆட்டத்தில் இரண்டு

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ஶ்ரீரங்கம் சித்திரை தேரோட்டம்!ஆண்டாள் சூடிய பட்டு வஸ்திரம் அனுப்பி வைப்பு!

ஏப் 25 ஶ்ரீரங்கம் சித்திரை திருவிழா தேரோட்டம்! ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ஆண்டாள் சூடிய பட்டு வஸ்திரம் அனுப்பி வைப்பு!

Entertainment News

Popular Categories