சம்பங்குளம் பள்ளிவாசலில் உண்டியல் திருட்டு; செங்கோட்டையைச் சேர்ந்த முகமது சலீம் உள்பட இருவர் கைது!

alwarkurichi police thamizharasan
alwarkurichi police thamizharasan

பள்ளிவாசலில் உண்டியலை உடைத்து  திருடியவர்களை நான்கு நாட்கள் வலைவீசித் தேடி, கைது செய்துள்ளனர்  ஆழ்வார்குறிச்சி போலீஸார். 

தென்காசி மாவட்டம் ஆழ்வார் குறிச்சி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட சம்பன்குளத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு  மெயின் ரோட்டிலுள்ள பள்ளிவாசலின் உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டது அங்குள்ள மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் ஆழ்வார்குறிச்சி உதவி ஆய்வாளர் தமிழரசன் சம்பவ இடத்தினை ஆய்வு செய்து சில கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து, இந்த வழக்கில் விசாரணை மேற்கொண்டு வந்தார். ஏற்கனவே  சம்பன்குளத்தில் நாடார் சமூகத்தினர் வழிவழியாக வழிபட்டுக் கொண்டிருந்த  கோயில், அவ்வூரில் பெரும்பான்மையினராக உள்ள இஸ்லாமிய அமைப்பினர் சிலரது தூண்டுதலால் மாவட்ட நிர்வாகம் போலீஸாரின் துணையுடன் இடித்து தரைமட்டமாக்கிய சம்பவத்தில், பதற்றம் ஏற்பட்டிருந்தது. 

இந்நிலையில், பள்ளிவாசலில் நடந்த உண்டியல் திருட்டு, மேலும் பிரச்னையை பெரிதாக்கும் சூழ்நிலை நிலவியது. பள்ளிவாசல் உண்டியல் திருட்டு என்பதால், போலீஸார் மிக துரிதமாக செயல்பட்டு, தனிக்கவனம் எடுத்து விசாரணை மேற்கொண்டனர். 

ஆழ்வார்குறிச்சி உதவி ஆய்வாளர் தமிழரசன் மற்றும்  ஏட்டுள் ஜிஜி குமார். முஸ்தபா ஆகியோர் கொண்ட தனிப்படையினர் சிந்தாமணியை சேர்ந்த  ராமையா மகன் முருகன் (வயது 40) மற்றும்  செங்கோட்டையைச் சேர்ந்த செய்யது ஜாவிது மகன் முகமது சலீம் (வயது 26) ஆகிய குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்தனர்.

ALSO READ:  ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!

இவர்களுடன் வந்த இன்னொரு குற்றவாளி கஞ்சா மகேஷ் என்பவரை தேடி வருகின்றனர். இந்த வழக்கில் விரைந்து செயல்பட்டு, குற்றவாளிகளை பிடித்த  ஆழ்வார்குறிச்சி காவல் துறையையும் உதவி ஆய்வாளர் தமிழரசன் மற்றும் தனிப்படையினரையும் அங்குள்ளவர்கள் பாராட்டினர்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

தாமிரபரணி ஆறு கடுமையாக மாசுபட்டுள்ளதாகவும், இந்துக்கள் மேற்கொள்ளும் சடங்குகளும் இதற்கு ஒரு காரணம் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தெரிவித்துள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூலை 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

தாமிரபரணி ஆறு கடுமையாக மாசுபட்டுள்ளதாகவும், இந்துக்கள் மேற்கொள்ளும் சடங்குகளும் இதற்கு ஒரு காரணம் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தெரிவித்துள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.

ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை. 

Entertainment News

Popular Categories