ஆத்மாவிற்கு பந்தம் என்றும் இல்லை!

sringeri swamigal - 2026

தக்ஷிணாம்னாய சிருங்கேரி சங்கராசார்ய ஜகத்குரு ஸ்ரீஸ்ரீ பாரதீதீர்த்த மஹாஸ்வாமிகள் அருளுரைகள்!

வ்யாக்ரீவதிஷ்டதி ஜரா பரிதர்ஜயந்தி – முதுமையும் அதிலிருக்கும் கஷ்டங்களையும் யாராலும் தவிர்க்க முடியாது. அதிலிருந்து தப்பிக்கவும் முடியாது.

ரோகாச்ச சத்ரவ இவ ப்ரஹரந்தி தேஹம் – இந்த சரீரம் வியாதிகளால் பயமுறுத்தப்படுகிறது.

வியாதிகளைக் கண்டு பயமில்லை என்று யாராலும் கூற முடியாது. வியாதிகளே இல்லாத மனிதனைப் பார்ப்பது மிகவும் துர்லபம். அப்படி இருக்கையில் மனிதனுக்கு எங்கே சாசுவதமான சுகம் இருக்கிறது? மரணம், மீண்டும் வேறொரு தாயின் வழியாகப் பிறப்பு என இப்படியே சுற்றிக் கொண்டிருந்தால் எங்கே சந்தோஷத்தை அனுபவிப்பது?

இந்த பிறப்பு-முதுமை-இறப்பு என்னும் சக்கரத்தில் மீண்டும் மீண்டும் சுற்றிக்கொண்டேயிருக்கும் ஒரு வலையில் நாம் விழுந்துவிட்டோம், இதுதான் பந்தம் ஆகும். யாருக்கு இந்தப் பந்தம் இருக்கிறது? இது உடம்பிற்கா அல்லது ஆத்மாவிற்கா? இது உடம்பிற்குத்தான். ஆத்மாவிற்கு பந்தம் என்றும் இல்லை.


“நாம் எந்த சுகத்தை அடைய நினைக்கிறோமோ அது (அந்த சுகம்) இந்த லெளகிகமான விஷயங்களினால் கிடைக்காது. ஆகையால் திரும்பவும் இந்த விஷயங்களில் ஈடுபடுவது வீண்” என்ற எண்ணம் நமக்கு வர வேண்டும்.

அப்படியென்றால், “எதில் வாஸ்தவமான சுகம் கிடைக்கும்?” என்று கேட்டால், “பகவானுடைய நினைவு மனதில் இருந்தால், மனதில் ஸத்விஷயங்களைப் பற்றி நினைத்தால், அப்போதுதான் வாஸ்தவமான சுகம் நம் அனுபவத்திற்கு வரும்” என்பதே அதற்குப் பதில், எல்லோரும் இதை அனுபவித்துப் பார்க்கலாம்.

மற்ற எல்லா விஷயங்களையும் மறந்துவிட்டு பகவானுடைய சன்னிதியில் ஒரு பத்து நிமிடங்கள் உட்கார்ந்து வேறு எதையும் சிந்திக்காமல், பகவானுடைய ரூபத்தை மட்டும் சிந்தித்துக் கொண்டிருந்தால் அப்போது மனதிற்கு ஒரு சொல்ல முடியாத இன்பம், ஒரு சொல்ல முடியாத ஆனந்தம் உண்டாகும் என்பதை நாம் நம் அனுபவத்திலேயே பார்க்கலாம்.


பகவானுக்கு நாம் என்ன கொடுக்க முடியும்? நம்மிடம் என்ன இருக்கிறது? அவனிடம் இல்லாதது என்ன நம்மிடம் இருக்கிறது?

இதை மனதில் வைத்துக் கொண்டுதான் பகவத்பாதர், “பகவானே! உனக்கு நான் என்ன கொடுக்க முடியும்? என்னுடைய மனதை உன்னுடைய பாதார விந்தத்திலே வைத்துவிடுகிறேன். எனக்கு அனுக்ரஹம் செய்” என்று வேண்டினார்.

மனதை பகவானுடைய பாதாரவிந்தத்திலே வைப்பது என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம்? மனம் என்பது கைக்கு கிடைக்கக்கூடிய பொருளா? அப்படி கிடைக்கக்கூடியதாக இருந்தால் அதை சுலபமாக எடுத்து வைத்து விடலாமே? ஆனால், அது கைக்குக் கிடைக்காதே!

பின்பு எப்படி மனதை பகவானின் பாதாரவிந்தத்திலே வைத்து விடுவதாகச் சொல்கிறார் என்றால், “பகவானே! எப்பொழுதும் உன்னுடைய பாதாரவிந்தத்தையே நான் நினைக்கும்படி எனக்கு அனுக்ரஹம் செய்” என்று அதற்கு அர்த்தம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories