செய்துங்கநல்லூர் வரதராஜ பெருமாள் கோயிலில் உழவாரப் பணி!

seithunganallur temple work - 2026

திருநெல்வேலி அருகே அமைந்துள்ள செய்துங்கநல்லூரில் வரதராஜப் பெருமாள் கோயிலில் ஞாயிறு இன்று நெல்லை உழவாரப் பணிக் குழுவினர் கோயிலை சுத்தப் படுத்தும் பணிகளை மேற்கொண்டனர்.

செய்துங்கநல்லூரில் மிகவும் பழமையானது வரதராஜ பெருமாள் கோயில். இந்தக் கோயிலில் ஒரு காலத்தில் தேர் ஓடி உள்ளதாகக் கூறப்படுகிறது. தெப்பம் உள்பட பல சிறப்பு வாய்ந்த நிகழ்ச்சிகள் நடந்த கோயிலாகவும் இந்தக் கோயில் இருந்துள்ளது. அருகே மிகப்பெரிய அக்ரகாரம் இருந்துள்ளது. இந்த அக்ரஹாரத்தில் இருந்த பிராமணர்கள், இந்தக் கோயிலை மிகச்சிறப்பாக திருவிழாக்களோடு கொண்டாடி உள்ளனர்.

பிராமணர்கள் அக்ரஹாரங்களை விட்டு இடம் பெயரத் தொடங்கிய பின், நாளடைவில் இந்தக் கோயில் அத்தகைய சிறப்பான வழிபாடுகளை இழந்து விட்டது. முட்புதர்கள் அடர்ந்து இந்தக் கோயில் ஒரு காலபூஜை திட்டத்துக்குள் வந்து விட்டது.

தற்போது இந்தக் கோயிலில் நெல்லை உழவாரப்பணிக் குழு தலைவர் முத்துகிருஷ்ணன் தலைமையில் உழவாரப்பணிகளைச் செய்து வருகிறார்கள். இன்று, கோயில் வளாகத்தில் உள்ள முள்செடிகளை அகற்றும் பணி நடந்தது. இந்தப் பணியை கோயில் நிர்வாக அதிகாரி கோகுல மணிகண்டன் ஆய்வு செய்தார். அவருடன் கோயில் எழுத்தர் இசக்கி முத்து உள்பட பலர் இருந்தனர்.

seithunganallur temple work1 - 2026

இன்று நடைபெற்ற உழவாரப்பணி குறித்து முத்துகிருஷ்ணன் கூறியபோது, இன்று செய்துங்கநல்லூர் வரதராஜ பெருமாள் கோயில் திருக்குளத்தில் பணி நடைபெற்றது. கோயில் ஈ ஓ மணிகண்டன் உடனிருந்தார்.

பெருங்குளம் பெருவழுதீசுவரர் கோயிலிலும் உழவாரப் பணி நடந்தது. அதிலும் திருக்குளத்தில் அதிக பாசி படர்ந்திருந்ததை அகற்றும் பெரும்பணி நடந்தது.

seithunganallur temple work2 - 2026

செய்துங்க நல்லூரில் சிலரை திருக்குளப் பணிக்கு விட்டுவிட்டு, பெருங்குளத்தில் பெருவழுதீசர் கோயில் பணியில் ஈடுபடலானோம்… என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories