February 22, 2026, 2:46 PM
30.4 C
Chennai

லடாக்கில் வீரமரணம்; சோகத்தில் கிராமம்!பழனியின் குடும்பத்துக்கு முதல்வர் இரங்கல்!

hawildar palani ramnathapuram
hawildar palani ramnathapuram

லடாக்கில் வீரமரணம் அடைந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த இந்திய ராணுவ வீரர்.

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா கடுக்கலூரை சேர்ந்த பழனி என்பவர் கடந்த 22 ஆண்டுகளாக இந்திய ராணுவத்தில் பணியாற்றி வருகின்றார். இவருக்கு வானதிதேவி என்ற மனைவியும், பிரசன்னா (10) என்ற மகனும், திவ்யா (8) என்ற மகளும் உள்ளனர்.

இவர்கள் தற்போது ராமநாதபுரம் சக்கரக்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட கஜினி நகரில் புதிதாக வீடு கட்டி வசித்து வருகின்றார்கள். பழனி லடாக்கில் இந்திய ராணுவத்தில் ஹவில்தார் ஆக பணியாற்றி வருகின்றார். இன்று அதிகாலையில் இந்திய ராணுவத்திற்கும் சீனா ராணுவத்திற்கும் இடையே நடந்த சண்டையில், சீன ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர்.

இதில் பழனியும் ஒருவராவார். இந்தத் தகவல் இந்திய ராணுவத்தில் ராஜஸ்தானில் பணிபுரியும் அவரது தம்பி இதயக்கனியிடம் லடாக்கில் உள்ள இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து இதயக்கனி தனது அண்ணன் இறந்த தகவலை அவர்களது குடும்பத்திற்கு தெரிவித்துள்ளார்.

jawans and col snathosh babu
jawans and col snathosh babu

இந்த தகவல் அவரது குடும்பத்திற்கு தெரிந்தவுடன் ஆழ்ந்த சோகத்தில் ஆழ்ந்தனர். ஒரே குடும்பத்தில் இருந்து இந்திய நாட்டை காப்பதற்காக ராணுவத்தில் சேர்ந்தவர் தற்போது உயிரிழந்தது அவருடைய குடும்பத்தில் மிகப்பெரிய சோகத்தையும் மிகப்பெரிய இழப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

பழனியின் வருவாயை மட்டுமே நம்பியிருந்த அவரது குடும்பத்திற்கு அரசு வேலை வழங்க வேண்டும், உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று உறவினர்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனிடையே முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பழனியின் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார். தனது டிவிட்டர் பதிவிலும் இரங்கல் தெரிவித்திருந்தார்.

உயிரிழந்த பழனியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு ஓரிரு தினங்களில் சொந்த ஊர் வந்து அடக்கம் செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

  • ரவிச்சந்திரன், மதுரை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

Topics

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories