உத்தர பிரதேசத்திலிருந்து இரண்டு சாதுக்கள் கங்கை, யமுனை, ரிஷிகேஷ்,ஜ ஹரித்துவார், போன்ற ஸ்தலங்களுக்கு சென்று விட்டு, ராமேஸ்வரம் வந்தனர்.
வெறும் பழங்களை மட்டுமே உண்டு, உயிர் வாழும் அவர்கள் ரயில் ஓடாததால், ராமேஸ்வரத்தில் தங்கி விட்டார்கள். இதை அறிந்த அந்த மாவட்ட கலெக்டர். வீரராகவராவ் கார் மூலம் மதுரைக்கு அனுப்பி வைத்தார்.
மதுரை கலெக்டர் வினய் உத்தரவின் பேரில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பாக அவர்கள், ‘காசி’ செல்வதற்கு உடனடியாக துரித E.PASS அளிக்க பட்டு, பழங்கள் வாங்கி கொடுத்து மதுரையிலிருந்து சிறப்பு ரயில் மூலம் ரெட் கிராஸ் நிர்வாகிகள். கோபாலகிருஷ்ணன், வக்கீல். முத்துக்குமார், ராஜு ஆகியோர் வழி அனுப்பி வைத்தனர்..
- செய்தி: ரவிச்சந்திரன், மதுரை