April 28, 2025, 8:56 AM
28.9 C
Chennai

ராணுவ வீரர் பழனி உடல் நல்லடக்கம்! அஞ்சலி செலுத்திய ஆட்சியர்கள்!

palani
palani

லடாக் பகுதியில் இரு தினங்களுக்கு முன்னர் சீன ராணுவத்தினரின் அநியாயமான அத்துமீறல் தாக்குதலால் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் பழனியின் உடல், அவரது சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

கடந்த இரு தினங்களுக்கு முன்பு நள்ளிரவில் இந்திய – சீன எல்லையில் சீன ராணுவத்தினர் திடீரென இந்திய வீரர்கள் தங்கியிருந்த பகுதிக்குள் நுழைந்து கைகலப்பில் ஈடுபட்டனர். தொடர்ந்து இந்திய வீரர்களும் தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர் என்று இந்திய ராணுவத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அவர்களில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த பழனி என்ற ஹவில்தாரும் ஒருவர்.

இந்நிலையில் நேற்று நள்ளிரவு பழனியின் உடல், ராணுவ விமானம் மூலம் மதுரை வந்தடைந்தது. பழனியின் உடலுக்கு மதுரை மாவட்ட ஆட்சியர் வினய் மலரஞ்சலி செலுத்தினார்.

homage hawildar
இந்திய எல்லையில் சீன ராணுவத்தினருடன் நடந்த சண்டையில் உயிர் நீத்த ஹவில்தார் பழனியின் உடலுக்கு மதுரை விமான நிலையத்தில் மரியாதை செலுத்தும் மதுரை மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய்.

பின்னர் அங்கிருந்து வாகனம் மூலம் சொந்த ஊரான ராமநாதபுரம் மாவட்டம் கடுக்கலூர் எடுத்துச் செல்லப்பட்டது. கிராம எல்லையில் இருந்து சுமார் 2 கி.மீ தொலைவில், அவரது உடல் ராணுவ வாகனத்தில் மாற்றப்பட்டு ராணுவ மரியாதையுடன் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது.

palani
palani

தேசியக் கொடி போர்த்தப் பட்ட பழனியின் உடலைப் பார்த்து குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கண்ணீர் விட்டு அஞ்சலி செலுத்தினர். அவரது குடும்பத்துக்கு ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் ஆறுதல் தெரிவித்தார். பின்னர் பழனியின் உடல் ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

  • ரவிச்சந்திரன், மதுரை
ALSO READ:  ‘இஸ்ரோ’ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் காலமானார்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

IPL 2025: முதலிடத்துக்கு முன்னேறிய பெங்களூர் அணி

ஐ.பி.எல் 2025 – இரண்டு ஆட்டங்கள் - 27.04.2025 முனைவர் கு.வை....

ராணுவத்துக்கு நிதி அளிக்குமாறு கோரும் வாட்ஸ்அப் தகவல்கள்; தவறான வழிகாட்டல் என விளக்கம்!

வாட்ஸ்அப்பில் பரவும் தவறான செய்தி குறித்து பாதுகாப்பு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நெல்லை ரயிலுக்கு 4 பெட்டி கூடுதல் சரி, ஆனா கடும் நெரிசலுள்ள மயிலாடுதுறை ரயிலுக்கு எப்போ?

கூடுதலாக 6 பெட்டிகளை இணைத்து 16 பெட்டிகளுடன் இயக்க வேண்டுமென மக்கள் பல மாதங்களாக கோரி வருகின்றனர்.

இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது!

தென்காசி மாவட்டத்தில் இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

IPL 2025: முதலிடத்துக்கு முன்னேறிய பெங்களூர் அணி

ஐ.பி.எல் 2025 – இரண்டு ஆட்டங்கள் - 27.04.2025 முனைவர் கு.வை....

ராணுவத்துக்கு நிதி அளிக்குமாறு கோரும் வாட்ஸ்அப் தகவல்கள்; தவறான வழிகாட்டல் என விளக்கம்!

வாட்ஸ்அப்பில் பரவும் தவறான செய்தி குறித்து பாதுகாப்பு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நெல்லை ரயிலுக்கு 4 பெட்டி கூடுதல் சரி, ஆனா கடும் நெரிசலுள்ள மயிலாடுதுறை ரயிலுக்கு எப்போ?

கூடுதலாக 6 பெட்டிகளை இணைத்து 16 பெட்டிகளுடன் இயக்க வேண்டுமென மக்கள் பல மாதங்களாக கோரி வருகின்றனர்.

இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது!

தென்காசி மாவட்டத்தில் இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

அமைச்சரவை மாற்றம்; பொன்முடி, செந்தில் பாலாஜி நீக்கம்! ஆளுநர் ஒப்புதல்!

தமிழக அமைச்சர்களாக இருந்து நீதிமன்ற நடவடிக்கைகள் மற்றும் சர்ச்சைகளில் சிக்கிய பொன்முடி, செந்தில் பாலாஜி ஆகியோரின் அமைச்சர் பதவிகள் பறிக்கப்பட்டுள்ளன.

செங்கோட்டை – மயிலாடுதுறை ரயிலில் நாளைக்கு போறீங்கன்னா… இத தெரிஞ்சுக்குங்க!

செங்கோட்டை- மயிலாடுதுறை ரயில் சேவையில் மாற்றம் செய்யப் பட்டுள்ளது. பராமரிப்புப் பணிகள் காரணமாக, நாளை ரயில் சேவையில் மாற்றம்

நாய்களை வாக்கிங் கூட்டிச் சென்ற போது தகராறு : 4 பேர் மீது வழக்கு!

இதுகுறித்து அசோக்குமார் கொடுத்த புகாரின் பேரில் விருதுநகர் பஜார் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Entertainment News

Popular Categories