April 26, 2025, 10:56 AM
33.1 C
Chennai

வீரவாஞ்சிநாதன் நினைவுநாளில் கரூரில் தாம்ப்ராஸ் சார்பில் நினைவஞ்சலி!

karur tambras vanchi
karur tambras vanchi

வீர வாஞ்சிநாதன் நினைவு தினத்தை முன்னிட்டு கரூரில் தமிழ்நாடு பிராமணர் சங்கம் (தாம்ப்ராஸ்) சார்பில் நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அன்றைய திருநெல்வேலி மாவட்டம்,  செங்கோட்டையை சேர்ந்த வீரவாஞ்சிநாதன் ஆங்கிலேய காலத்தின் கலெக்டர் ஆஷ் துரையை பிரிட்டிஷ் கால ஆட்சியில் சுட்டுக்கொன்ற  தினமான ஜூன் 17ஆம் நாள் வீரவணக்க நாளாக அனுசரிக்கப்படுகிறது.
இந்திய நாட்டின் சுதந்திரத்திற்காக போராடிய வீரர்களை அன்றைய ஆங்கிலேய அரசு அடக்குமுறையால் ஒடுக்கியும் அடக்கியும்  வந்தது.

இதை எதிர்த்து ஆங்கிலேயர்களை நாட்டை விட்டு விரட்ட திட்டமிட்ட வீரர்களில் வீரவாஞ்சிநாதன் ஒருவர். இந்திய சுதந்திரப் போராட்டத்திற்காக போராடிய பல தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.  கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரமும் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.  அவரை விடுவிக்க கோரி நடத்தப்பட்ட போராட்டத்தை அடக்க அப்போதைய பிரிட்டிஷ் காலத்தில் நெல்லை சப் கலெக்டர் ஆஷ் துரை துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்டார். இதில் 4 பேர் கொல்லப்பட்டனர்

ALSO READ:  திமுக., அரசின் சாராயக் கடை ஊழல்: போராட்டத்தை தடுத்து பாஜக., தலைவர்கள் கைது!

இதனால் வெகுண்ட வாஞ்சிநாதன், சாவடி அருணாச்சலம் பிள்ளை சேர்ந்து ஆஷ் துரையைச் சுட்டுக் கொல்லத் திட்டமிட்டனர் அதன்படி, 1911ஆம் ஆண்டு ஜூன் 17ஆம் தேதி, நெல்லை கலெக்டர் ஆஷ்துரை  குடும்பத்துடன் கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்ல புறப்பட்ட அவரையும் அவரது மனைவியையும் மணியாச்சி ரயில் நிலையத்தில் வைத்து வீரவாஞ்சி சுட்டுக் கொன்றார். பின்னர் அதே துப்பாக்கியால் தன்னையும் சுட்டுக் கொன்று களமரணம் அடைந்தார்.

karur tambras
karur tambras

இதனையடுத்து 110 வது ஆண்டாக தமிழ்நாடு பிராமணர் சங்கம் (தாம்ப்ராஸ்) கரூர் மாவட்ட கிளை சார்பில், மாவட்ட தலைவர் ஸ்ரீதரன் தலைமையில், அவரது இல்லத்தில் வீரவாஞ்சிநாதன் திருவுருவப் படத்திற்கு சந்தன மாலை மற்றும் மலர் மாலை அணிவித்து மலர் தூவி நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு பிராமணர் சங்கம் கரூர் மாவட்ட நிர்வாகிகள் செய்தி மக்கள் தொடர்பு துறை ஜெடெக்ஸ் டாக்டர் சிவக்குமார், மாவட்ட பொதுச் செயலாளர் வெங்கடேசன், ஓய்வு பெற்ற காவல்துறை துணை கண்காணிப்பாளர் ராஜா, வெண்ணமலை ரமேஷ், காந்திகிராமம் சங்கரநாராயணன், மகளிர் அணி நிர்வாகிகள் ஸ்ரீதேவி அலமேலு ஆகியோர் உள்ளிட்டோர் பங்கேற்ற சுதந்திரத்திற்காக போராடிய வீர வாஞ்சி நாதனுக்கு புகழஞ்சலி செலுத்தினர்.

ALSO READ:  மத்திய அரசின் கொள்கைத் திணிப்பு என்றால், திமுக.,வினர் ஏன் சிபிஎஸ்இ பள்ளிகள் நடத்த வேண்டும்?!

இதற்கான முழு ஏற்பாடுகளை தமிழ்நாடு பிராமணர் சங்கம் கரூர் மாவட்ட சிறப்பாக செய்திருந்தது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்.26 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

IPL 2025: கடைசி இடத்தில் தொடரும் தோனியின் சிஎஸ்கே

ஐ.பி.எல் 2025 – சென்னை vs ஹைதராபாத் – எம்.ஏ. சிதம்பரம்...

காஞ்சி சங்கர மடத்தின் 71வது பீடாதிபதி தேர்வு!

காஞ்சி காமகோடி பீடாதிபதியின் ஆசீர்வாதத்துடன், கணேச சர்மா யஜுர்வேதம், சாமவேதம், ஷடங்காக்கள், தசோபநிஷத் மற்றும் சாஸ்திர படிப்புகளைத் தொடர்ந்து வருகிறார்.

‘இஸ்ரோ’ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் காலமானார்!

'இஸ்ரோ' முன்னாள் தலைவர் கி.கஸ்தூரி ரங்கன் தம் 84ம் வயதில், வயது மூப்பு காரணமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, பெங்களூருவில் ஏப்.25 இன்று காலமானார்.

பயங்கரவாதிகளின் முதுகெலும்பை முறிக்கத் தேவையான சக்தி..!

இந்நிலையில், நேற்று பீகார் மாநிலத்துக்குச் சென்றிருந்த பிரதமர் மோடி, அங்கே நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், காஷ்மீர் படுகொலைச் சம்பவத்தில்

Topics

பஞ்சாங்கம் ஏப்.26 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

IPL 2025: கடைசி இடத்தில் தொடரும் தோனியின் சிஎஸ்கே

ஐ.பி.எல் 2025 – சென்னை vs ஹைதராபாத் – எம்.ஏ. சிதம்பரம்...

காஞ்சி சங்கர மடத்தின் 71வது பீடாதிபதி தேர்வு!

காஞ்சி காமகோடி பீடாதிபதியின் ஆசீர்வாதத்துடன், கணேச சர்மா யஜுர்வேதம், சாமவேதம், ஷடங்காக்கள், தசோபநிஷத் மற்றும் சாஸ்திர படிப்புகளைத் தொடர்ந்து வருகிறார்.

‘இஸ்ரோ’ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் காலமானார்!

'இஸ்ரோ' முன்னாள் தலைவர் கி.கஸ்தூரி ரங்கன் தம் 84ம் வயதில், வயது மூப்பு காரணமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, பெங்களூருவில் ஏப்.25 இன்று காலமானார்.

பயங்கரவாதிகளின் முதுகெலும்பை முறிக்கத் தேவையான சக்தி..!

இந்நிலையில், நேற்று பீகார் மாநிலத்துக்குச் சென்றிருந்த பிரதமர் மோடி, அங்கே நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், காஷ்மீர் படுகொலைச் சம்பவத்தில்

IPL 2025: கோலி அதிரடி; பெங்களூருக்கு சிறப்பான வெற்றி!

பெங்களூரு அணியின் பந்துவீச்சாளர் ஹேசல்வுட் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இன்றைய ஆட்டத்தில் இரண்டு

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ஶ்ரீரங்கம் சித்திரை தேரோட்டம்!ஆண்டாள் சூடிய பட்டு வஸ்திரம் அனுப்பி வைப்பு!

ஏப் 25 ஶ்ரீரங்கம் சித்திரை திருவிழா தேரோட்டம்! ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ஆண்டாள் சூடிய பட்டு வஸ்திரம் அனுப்பி வைப்பு!

Entertainment News

Popular Categories