எல்லையில் உயிர் நீத்த வீரர்களுக்கு இந்து முன்னணியினர் அஞ்சலி!

Published:

madurai hindumunnani
madurai hindumunnani

எல்லையில் வீரமரணம் அடைந்த தமிழக இராணுவ வீரருக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி, தமிழகத்தில் பல இடங்களில் இந்து முன்னணி சார்பில் நடத்தப் பட்டது.

சென்னையில் இந்து முன்னணி நிறுவுனர் தலைவர் ராம.கோபாலன் கலந்து கொள்ள இந்து முன்னணி தலைமை அலுவலகத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

rama gopalan
rama gopalan

இது போல், தமிழகத்தில் பல்வேறு இடங்களிலும் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மதுரை மாவட்டம் ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் இந்து முன்னணி சார்பாக சீனாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து உறுதி மொழி எடுத்தனர். இதில் சதீஸ்குமார் மாவட்ட செயலாளர், மாணிக்கமூர்த்தி மாவட்ட துணை தலைவர், ஜெய்கணேஷ் , சக்தி சரண் குமார் , சுரேஷ் , சபரி ராஜா மற்றும் பல நிர்வாகிகள் கலந்து கொண்டனார்.

tenkasi hindumunnani
tenkasi hindumunnani

எல்லையில் உயிர்நீத்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி தென்காசி நகரில் நடைபெற்றது தென்காசி நகர இந்து முன்னணி சார்பில் நடைபெற்ற இந்த அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் இந்து முன்னணி மாவட்ட செயலாளர் சிவா தென்காசி நகர தலைவர் இசக்கிமுத்து நகர பொதுச் செயலாளர் நாராயணன் பாஜக மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜ்குமார் மற்றும் இந்து முன்னணி பொறுப்பாளர்கள் சூர்யா மாரி, செல்வம் விஜய் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

ALSO READ:  IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!
tenkasi hindumunnani
tenkasi hindumunnani

இது போல், கன்னியாகுமரியிலும் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

kanyakumari rss
kanyakumari rss

கன்னியாகுமரி மாவட்ட ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் சார்பாக குமரிமுனையில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img