மதுரை : திருப்பரங்குன்றம் அருகே வடிவேல் கரை பகுதியை சேர்ந்த இளைஞர் கொரானா தொற்றில் உயிரிழந்தார்.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் வடிவேல் கரை பகுதியை சேர்ந்தவர் அண்ணாமலை ( 29). இவர் தனியார் நிதிநிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
இவருக்கு கடந்த நான்கு நாட்களுக்கு முன் கொரண தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிட்சை பெற்று வந்தார். தற்போது சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார்.
இவருக்கு யோக தேவி (வயது 23) என்ற மனைவியும். புகழரசன் ( 5) என்ற மகனும் உள்ளனர். தற்போது யோக தேவி 5 மாத கர்ப்பிணியாக உள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
மதுரை அருகே பரவை காய்கறி மார்க்கெட்டில் நடத்திய மருத்துவ பரிசோதனையில் 25 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. மேலும், இரண்டாயிரம் பேரை பரிசோதிக்க முடிவு.
- செய்தி: ரவிச்சந்திரன், மதுரை