சென்னை: சென்னை மவுலிவாக்கத்தில் 11 மாடிக் கட்டடம் சரிந்து விழுந்த விபத்து குறித்து நடந்து வரும் விசாரணை ஆணைய அறிக்கை சட்டமன்றத்தில் தாக்கலாகும் என்று நீதிமன்றத்தில் அரசு வழக்குரைஞர்கள் தெரிவித்துள்ளனர். இந்தக் கட்டடம் கட்டுவதற்கு அனுமதி வழங்கியதில், ஏராளமான முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், இடிந்து விழுந்த கட்டட இடிபாடுகளுக்கு இடையே பலரது உடல்கள் இருக்கிறது என்றும் இந்தச் சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில், தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், டிராபிக் ராமசாமி உட்பட பலர் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத் தரப்பில் தலைமை வழக்கறிஞர் ஏ.எல். சோமயாஜி, மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் உட்பட சிலர் ஆஜராகினர். அந்த வாதத்தின்போது, இந்த கட்டடம் இடிந்து விழுந்தது குறித்து அரசு நியமித்த விசாரணை ஆணையம் ஏற்கெனவே அறிக்கை தாக்கல் செய்து விட்டது. அந்த அறிக்கையை ஏன் சட்டசபையில் தாக்கல் செய்யவில்லை? பொது விவாதம் ஏன் மேற்கொள்ளவில்லை? என்று கேள்வி எழுப்பினார் நீதிபதி. அதற்கு பதிலளித்த தலைமை வழக்கறிஞர் சோமையாஜி, கடந்த முறை சட்டசபைக் கூட்டம் 3 நாட்கள் மட்டுமே நடந்தது. அதனால், அந்த அறிக்கை விவாதத்துக்கு வைக்கப்படவில்லை. தற்போது பட்ஜெட் கூட்டத் தொடர் கூட உள்ளது. அப்போது ரகுபதி ஆணைய அறிக்கையை அரசு தாக்கல் செய்யும் என்றார். மூத்த வழக்கறிஞர் வில்சன் தெரிவிக்கையில், கட்டடம் இடிந்து விழுந்ததால், அந்தக் கட்டடத்தில் வீட்டை வாங்க முன்பணம் கொடுத்தவர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும். மேலும், கட்டடம் இடிந்து விழுந்த பகுதிக்குள் நுழைய அரசு தடை விதித்துள்ளது. இதற்குக் காரணம், கட்டட இடிபாடுகளுக்கு இடையே மேலும் பல பிணங்கள் உள்ளே உள்ளன. அவற்றை அப்புறப்படுத்த தமிழக அரசு அப்பகுதிக்குள் நுழைய தடை விதித்து, பிணத்தை தேடும் பணியை ரகசியமாகப் பின்பற்றுகிறது என்றார். இந்நிலையில் நீதிபதிகள் இந்த வழக்கை ஜூன் 30 ஆம் தேதிக்கு தள்ளி வைப்பதாக அறிவித்தனர்.
Hot this week
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!
பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்
சற்றுமுன்
சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?
உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!
பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்
சற்றுமுன்
சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?
உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....
லைஃப் ஸ்டைல்
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி
டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.
ஆன்மிகக் கட்டுரைகள்
ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!
வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

