சென்னை: சென்னை மவுலிவாக்கத்தில் 11 மாடிக் கட்டடம் சரிந்து விழுந்த விபத்து குறித்து நடந்து வரும் விசாரணை ஆணைய அறிக்கை சட்டமன்றத்தில் தாக்கலாகும் என்று நீதிமன்றத்தில் அரசு வழக்குரைஞர்கள் தெரிவித்துள்ளனர். இந்தக் கட்டடம் கட்டுவதற்கு அனுமதி வழங்கியதில், ஏராளமான முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், இடிந்து விழுந்த கட்டட இடிபாடுகளுக்கு இடையே பலரது உடல்கள் இருக்கிறது என்றும் இந்தச் சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில், தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், டிராபிக் ராமசாமி உட்பட பலர் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத் தரப்பில் தலைமை வழக்கறிஞர் ஏ.எல். சோமயாஜி, மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் உட்பட சிலர் ஆஜராகினர். அந்த வாதத்தின்போது, இந்த கட்டடம் இடிந்து விழுந்தது குறித்து அரசு நியமித்த விசாரணை ஆணையம் ஏற்கெனவே அறிக்கை தாக்கல் செய்து விட்டது. அந்த அறிக்கையை ஏன் சட்டசபையில் தாக்கல் செய்யவில்லை? பொது விவாதம் ஏன் மேற்கொள்ளவில்லை? என்று கேள்வி எழுப்பினார் நீதிபதி. அதற்கு பதிலளித்த தலைமை வழக்கறிஞர் சோமையாஜி, கடந்த முறை சட்டசபைக் கூட்டம் 3 நாட்கள் மட்டுமே நடந்தது. அதனால், அந்த அறிக்கை விவாதத்துக்கு வைக்கப்படவில்லை. தற்போது பட்ஜெட் கூட்டத் தொடர் கூட உள்ளது. அப்போது ரகுபதி ஆணைய அறிக்கையை அரசு தாக்கல் செய்யும் என்றார். மூத்த வழக்கறிஞர் வில்சன் தெரிவிக்கையில், கட்டடம் இடிந்து விழுந்ததால், அந்தக் கட்டடத்தில் வீட்டை வாங்க முன்பணம் கொடுத்தவர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும். மேலும், கட்டடம் இடிந்து விழுந்த பகுதிக்குள் நுழைய அரசு தடை விதித்துள்ளது. இதற்குக் காரணம், கட்டட இடிபாடுகளுக்கு இடையே மேலும் பல பிணங்கள் உள்ளே உள்ளன. அவற்றை அப்புறப்படுத்த தமிழக அரசு அப்பகுதிக்குள் நுழைய தடை விதித்து, பிணத்தை தேடும் பணியை ரகசியமாகப் பின்பற்றுகிறது என்றார். இந்நிலையில் நீதிபதிகள் இந்த வழக்கை ஜூன் 30 ஆம் தேதிக்கு தள்ளி வைப்பதாக அறிவித்தனர்.
Hot this week
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மார்ச் 26 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் – மார்ச் 25 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...
ஆன்மிகச் செய்திகள்
திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!
ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது
கட்டுரைகள்
ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?
அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

Topics
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மார்ச் 26 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் – மார்ச் 25 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...
ஆன்மிகச் செய்திகள்
திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!
ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது
கட்டுரைகள்
ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?
அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...
அரசியல்
அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!
திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!
பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

