மவுலிவாக்கம் கட்டட விபத்து வழக்கு: விசாரணை ஆணைய அறிக்கை சட்டசபையில் தாக்கலாகும் என தகவல்

Published:

சென்னை: சென்னை மவுலிவாக்கத்தில் 11 மாடிக் கட்டடம் சரிந்து விழுந்த விபத்து குறித்து நடந்து வரும் விசாரணை ஆணைய அறிக்கை சட்டமன்றத்தில் தாக்கலாகும் என்று நீதிமன்றத்தில் அரசு வழக்குரைஞர்கள் தெரிவித்துள்ளனர். இந்தக் கட்டடம் கட்டுவதற்கு அனுமதி வழங்கியதில், ஏராளமான முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், இடிந்து விழுந்த கட்டட இடிபாடுகளுக்கு இடையே பலரது உடல்கள் இருக்கிறது என்றும் இந்தச் சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில், தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், டிராபிக் ராமசாமி உட்பட பலர் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத் தரப்பில் தலைமை வழக்கறிஞர் ஏ.எல். சோமயாஜி, மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் உட்பட சிலர் ஆஜராகினர். அந்த வாதத்தின்போது, இந்த கட்டடம் இடிந்து விழுந்தது குறித்து அரசு நியமித்த விசாரணை ஆணையம் ஏற்கெனவே அறிக்கை தாக்கல் செய்து விட்டது. அந்த அறிக்கையை ஏன் சட்டசபையில் தாக்கல் செய்யவில்லை? பொது விவாதம் ஏன் மேற்கொள்ளவில்லை? என்று கேள்வி எழுப்பினார் நீதிபதி. அதற்கு பதிலளித்த தலைமை வழக்கறிஞர் சோமையாஜி, கடந்த முறை சட்டசபைக் கூட்டம் 3 நாட்கள் மட்டுமே நடந்தது. அதனால், அந்த அறிக்கை விவாதத்துக்கு வைக்கப்படவில்லை. தற்போது பட்ஜெட் கூட்டத் தொடர் கூட உள்ளது. அப்போது ரகுபதி ஆணைய அறிக்கையை அரசு தாக்கல் செய்யும் என்றார். மூத்த வழக்கறிஞர் வில்சன் தெரிவிக்கையில், கட்டடம் இடிந்து விழுந்ததால், அந்தக் கட்டடத்தில் வீட்டை வாங்க முன்பணம் கொடுத்தவர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும். மேலும், கட்டடம் இடிந்து விழுந்த பகுதிக்குள் நுழைய அரசு தடை விதித்துள்ளது. இதற்குக் காரணம், கட்டட இடிபாடுகளுக்கு இடையே மேலும் பல பிணங்கள் உள்ளே உள்ளன. அவற்றை அப்புறப்படுத்த தமிழக அரசு அப்பகுதிக்குள் நுழைய தடை விதித்து, பிணத்தை தேடும் பணியை ரகசியமாகப் பின்பற்றுகிறது என்றார். இந்நிலையில் நீதிபதிகள் இந்த வழக்கை ஜூன் 30 ஆம் தேதிக்கு தள்ளி வைப்பதாக அறிவித்தனர்.

ALSO READ:  போதைப் பழக்கத்துக்கு எதிரான இயக்கத்துக்கு வலு சேர்ப்போம்! மனதின் குரலில் பிரதமர்!
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img