முதல்வர் பழனிசாமி பதவி விலக வலியுறுத்தி டிராபிக் ராமசாமி போராட்டம்
சென்னை பாரிமுனையில் உள்ள வங்கிக் கட்டடத்தின் மீது ஏறி டிராபிக் ராமசாமி
போராட்டம் நடத்தி வருகிறார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் காமராஜ்,
விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் பதவி விலக வலியுறுத்தி குறளகம் அருகே உள்ள வங்கி
கட்டடத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.