spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeசற்றுமுன்ஸ்டாலினின் பொறாமை காய்ச்சலை கட்டுப் படுத்தவே முடியாது!: ஆர்.பி.உதயகுமார்!

ஸ்டாலினின் பொறாமை காய்ச்சலை கட்டுப் படுத்தவே முடியாது!: ஆர்.பி.உதயகுமார்!

- Advertisement -
rb udhayakumar
rb udhayakumar

கொரோனா காய்ச்சலை கட்டுப்படுத்தமுடியும்… ஆனால், ஸ்டாலினின் பொறாமை காய்ச்சலை கட்டுப்படுத்த முடியாது என்று, அமைச்சர் ஆர் பி உதயகுமார் கூறினார்.

கொரோனா காய்ச்சலை கட்டுப்படுத்திடோம் ஸ்டாலின் பொறாமை காய்ச்சலை கட்டுப்படுத்த முடியாது என்று அமைச்சர் ஆர் பி உதயகுமார் கூறினார் 

அம்மா சேரிடபில்  டிரஸ்ட் சார்பில் அம்மா கிச்சன் மூலம் மதுரையில்  கொரோனா  சிகிச்சை பெறும் நோயாளி களுக்கும், இங்கு பணிபுரியும் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், சுகாதார ஊழியர்கள் மற்றும் காவல் துறையினர் ஆகியோருக்கு 3 வேளை உணவும், 2 வேளை பாசிப்பருப்பு சுண்டல் மற்றும் இஞ்சி டீ வழங்கப்பட இருக்கிறது.

உணவு தயாரிக்கும் அம்மா கிச்சன் கூடத்தை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பார்வையிட்டு உணவை பரிசோதனை செய்து செய்தியாளர்களிடம்  கூறியதாவது;

உணவே மருந்து என்பார்கள் அதுபோல் இங்கு அம்மா கிச்சனில் தயார் செய்யும் உணவுகள் ஆரோக்கியமான முறையில் தயார் செய்யப்படுகிறது இங்கே தயாரிக்கும் உணவில் இஞ்சி, மிளகு ,சுக்கு, வெங்காயம், பூண்டு இப்படி நோய் எதிர்ப்பு சக்தி மிக்க உணவு மூலம்  புரதச்சத்து நிறைந்த வகையில்  தயாரிக்கப்பட்டு வருகிறது

இன்றைக்கு ஸ்டாலின் இதுவரை கொரோனா குறித்து  நூற்றுக்கும் மேற்பட்ட அறிக்கை விட்டுள்ளார் அந்த அறிக்கையில் ஒரு அறிக்கை கூட மக்கள் நலன் சார்ந்த அறிக்கை இல்லை அத்தனை அறிக்கைகளும் பொய்யான, விஷமத்தனமான ,மக்களை அச்சுறுத்தும் வகையில் தான் இருக்கிறது  நோய் உள்ளவர்களுக்கு நம்பிக்கைதான் மருந்து ஆனால் ஒரு இடத்தில் கூட மக்களுக்கு  நம்பிக்கை கூறவில்லை

ஒரு பொறுப்புள்ள எதிர்க்கட்சிகள் அரசுக்கு நல்ல ஆலோசனை கூறவேண்டும் ஆனால் ஸ்டாலின் அரசுக்கு ஒத்துழைப்பு அளித்து வரும் அரசு அதிகாரிகளையும் வசை பாடுகிறார் பழி சொல்லுபவர்களுக்கு வழி கேட்டால் தெரியாது என்பார்கள் அதுபோலத்தான் இன்றைக்கு எதிர்க்கட்சிகள் உள்ளன

இன்று காலை கூட 5:30 மணிக்கு நான் அம்மா கிச்சனில் ஆய்வு செய்தபோது அப்போது முதலமைச்சர் என்னிடம் தொலைபேசியில் அம்மா கிச்சன் மூலம் வழங்கப்படும் இந்த உணவை சரியான நேரத்தில் நேரத்தில் வழங்க வேண்டும் என்று பல்வேறு ஆலோசனை எனக்கு வழங்கினார்

இதே எதிர்க்கட்சி  தலைவர்  ஸ்டாலின் இதே மணிக்கு என்ன செய்து கொண்டிருப்பார் மக்களைப் பற்றி சிந்திக்க மாட்டார் மக்களைப் பற்றி சிந்திக்கும் ஒரே தலைவர் முதலமைச்சர். அதேபோல் அவருக்கு உறுதுணையாக இருக்கும் துணை முதலமைச்சர் ஆவார்

இந்த கொரோனா காய்ச்சலை கூட கட்டுப்படுத்த முடியும் ஆனால் ஸ்டாலின் பொறாமை காய்ச்சலை ஒருபோதும் கட்டுப்படுத்த முடியாது என்று அவர் கூறினார்

இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் எஸ் எஸ் சரவணன், கழக அம்மா பேரவை துணைச் செயலாளர் பா.வெற்றிவேல், மாவட்ட இலக்கிய அணி  செயலாளர் திருப்பதி, ஒன்றிய கழக செயலாளர் மகாலிங்கம் உட்பட பலர் இருந்தனர்

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe