“நீ மதராஸிலிருந்துதான் வந்திருக்கே!..”..பெரியவா

20fr mahaperiyava10 634796g - 2026

“நீ மதராஸிலிருந்துதான் வந்திருக்கே!..”..பெரியவா (என்னுடைய சென்னை மாற்றல்
உத்தரவின் ஒரு பிரதி
எனக்குக் கிடைப்பதற்கு முன்னதாகவே பெரியவாள் கைக்குப் போயிருக்குமோ?–ஹூப்ளி
ராமசாமி.)

சொன்னவர்-என்.ராமஸ்வாமி-செகந்தராபாத்.
தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

1985…காஞ்சிபுரம் ஸ்ரீமடம். நமஸ்காரம் செய்துவிட்டு எழுந்தேன்.
“யாரு?…ஹூப்ளி ராமசாமியா?..எங்கேருந்து வரே?.. மதராஸ்லேருந்து
தானே?”—பெரியவா “விஜயவாடாவிலிருந்து வரேன். இப்போ அங்கேதான் வேலை..” –நான்.

“இல்லையே..மதராஸிலிருந்து தானே?”—பெரியவா. நான் முதலில் கூறியது,
பெரியவாளின் திருச்செவிகளில் சரியாக விழவில்லை போலும் என்று எண்ணிக்கொண்டு,
சற்று உரத்த குரலில்,”விஜயவாடாவிலிருந்து..மதராஸ் வழியாத்தானே வரணும்…”
என்றேன் நான்.

பெரியவா, “இல்லே…நீ மதராஸிலிருந்து தான் வந்திருக்கே.”

பின்னரும் பெரியவாளிடம் வாதாட விரும்பாமல் பிரசாதம்
பெற்றுக்கொண்டு சென்னைக்கு வந்தேன். அங்கே கொஞ்சம் சொந்த வேலை இருந்தது.
செகந்தராபாத்திலுள்ள என்
மேலதிகாரிக்கு போன் செய்து ஒரு வார லீவு கேட்டேன். அவர் சொன்னார்;

” Ramaswami! Here is a Bombshell..you are transferred to Madras..”

ALSO READ:  தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் 59 ஆக உயரும்: அமித் ஷா விளக்கம்!

“சார், நான் மெட்ராஸுக்கு மாற்றல் கேட்கவில்லை. செகந்தராபாத்துக்குத் தான்
கேட்டிருந்தேன்…” “Sorry, You are to be relieved tomorrow. Go to
Vijayawada immediately and get relieved tomorrow.”

அப்படியே செய்தேன்.

என்னுடைய சென்னை மாற்றல் உத்தரவின் ஒரு பிரதி
எனக்குக் கிடைப்பதற்கு முன்னதாகவே பெரியவாள் கைக்குப் போயிருக்குமோ?

‘இல்லே..நீ மதராஸிலிருந்துதான் வந்திருக்கே!..’ என்று பெரியவா சொன்ன அந்த
நிமிடத்தில், நான் சென்னை அதிகாரியாகத் தான் இருந்திருக்கேன்.

நாம் செய்யக் கூடியது ஒன்றே ஒன்று தான். கவலையே படாமல்,எல்லா சுமைகளையும்
பெரியவாளிடம் transfer செய்து விடுவது தான்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

Topics

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

Entertainment News

Popular Categories