10-ஆம் வகுப்பு தேர்வுகள் தொடக்கம்

Published:

exam-studentsசென்னை: 10 ஆம் வகுப்புத் தேர்வுகள் இன்று தொடங்கின. தமிழகம், புதுவையில் 11 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்தத் தேர்வினை எழுதுகின்றனர். இந்தத் தேர்வு ஏப்ரல் 10-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 3,298 தேர்வு மையங்களில் 10.72 லட்சம் பேர் எழுத உள்ளனர். தனித்தேர்வர்களாக 50,429 பேர் எழுதுகின்றனர். தேர்வுகள் காலை 9.15 மணிக்கே தொடங்குகின்றன. 9.30 மணிக்குத் துவங்கி, முதல் 15 நிமிடங்கள் வினாத்தாளைப் படித்துப் பார்க்கவும், விடைத்தாள் விவரங்களைப் பூர்த்தி செய்யவும் வழங்கப்படும். நண்பகல் 12 மணி வரை தேர்வு நடைபெறும். தேர்வுப் பணிகளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஈடுபடுகின்றனர். 5,200-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கொண்ட பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையில் 578 பள்ளிகளிலிருந்து 57,344 பேரும், புதுச்சேரியில் 291 பள்ளிகளிலிருந்து 19,559 பேரும் 10-ஆம் வகுப்புத் தேர்வை எழுதுகின்றனர்.

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img