இந்த உலகக் கோப்பையின் அரை இறுதிப் போட்டியில் இந்தியா – ஆஸ்திரேலிய அணிகள் மோதும் போட்டியைக் காண மிகுந்த ஆவலுடன் காத்திருப்பதாக ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மைக் ஹசி தெரிவித்துள்ளார். தற்போதுள்ள சூழ்நிலையை வைத்துப் பார்த்தால் இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்க அணிகள் வெற்றி பெற்று அரை இறுதிக்குள் நுழையும் என்று தெரிகிறது. பரபரப்பான அந்த அரை இறுதிப் போட்டியில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் ஆட்டத்தைக் காண மிகுந்த எதிர்ப்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கிறேன். இம்முறை ஆஸ்திரேலிய அணி உலகக் கோப்பையை வென்று 5 ஆவது முறையாக கோப்பையைக் கைப்பற்றும் என்று எதிர்பார்க்கிறேன் என்று கூறியுள்ளார் மைக் ஹசி. அவரது ஆசைப்படி, நடக்கவும் வாய்ப்புகள் கூடியுள்ளன. நாளை அடிலெய்டில் நடக்கும் போட்டியில் பாகிஸ்தானுடன் ஆஸ்திரேலியா வெல்லும் பட்சத்தில் இந்த ஆசை நிறைவேற வாய்ப்புள்ளதாம்.
அரையிறுதியில் ஆஸ்திரேலிய – இந்திய அணிகள் மோதும் போட்டியைக் காண ஆவல்: மைக் ஹசி
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

