புது தில்லி: பெண்களின் நிறம் குறித்த தனது கருத்துக்கு வருத்தம் தெரிவித்தார் சரத் யாதவ். மேலும், அமைச்சர் ஸ்மிருதி இரானி தொடர்பாகத் தான் தெரிவித்த கருத்துக்கும் நேற்று மாநிலங்களவையில் வருத்தம் தெரிவித்தார் சரத் யாதவ். காப்பீடு மசோதா தொடர்பான விவாதத்தின் போது, ஐக்கிய ஜனதா தள தலைவர் சரத் யாதவ், தென் இந்தியாவில் வாழும் பெண்கள் கறுப்பு நிறத்தவர்கள். ஆயினும் அழகானவர்கள். எனினும் ஆண்களுக்கு வெள்ளைத் தோலின்மீது ஏக்கம் உண்டு என்று குறிப்பிட்டார். இதற்கு, மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி எதிர்ப்பு தெரிவித்தார். அதற்கும் சரத் யாதவ் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இப்பிரச்சினை குறித்து மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி அவையில் எழுப்பினார். அவர் பேசும்போது, “சரத் யாதவின் கருத்துகள் அவைக்குறிப்பில் இடம்பெறாத நிலையிலும், ஊடகங்களில் பல்வேறு விதமாக வெளியாகின்றன. இப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க அவர் விளக்கமளிக்க வேண்டும்” என்றார். அதற்கு பதிலளித்த சரத் யாதவ், “இதற்காக நான் வருத்தம் தெரிவிக்கிறேன். நான் தாய் வழிச் சமூகமான கோண்டு பழங்குடியின பின்புலத்திலிருந்து வந்தவன். பெண்களை மதிக்கிறேன். நமது வர்த்தக அமைச்சர் நிர்மலா சீதாராமன் மிகச் சிறந்தவர். ஸ்மிருதி இரானியை மதிக்கிறேன். அவரின் கல்வித் தகுதி குறித்த கேள்வி எழுந்த போது முதலில் ஆதரவுக் குரல் எழுப்பியவன் நான்தான். அவரை நான் மதிக்கிறேன்” என்றார்.
Hot this week
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,
அரசியல்
‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!
போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!
ஆன்மிகச் செய்திகள்
பங்குனி உத்திர ஆராட்டு விழாவுக்கு தயாராகிறது பம்பை!
ஆற்றின் தூய்மையைப் பாதுகாக்க, பக்தர்கள் தங்கள் ஆடைகளை ஆற்றில் வீசி எறிவதற்குத் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.
அரசியல்
தொகுதி, வேட்பாளர் தேர்வில் அதிருப்தி: காங்கிரஸில் என்ன நடக்கிறது?
காங்கிரசை எங்க கொண்டு வந்து நிறுத்தியிருக்கீங்க பாத்தீங்களா செல்வப்பெருந்தகை? என்று கட்சியினர் குமுறும் அளவுக்கு அவரது செயல்பாடு இருக்கிறது.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மார்ச் 31 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,
அரசியல்
‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!
போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!
ஆன்மிகச் செய்திகள்
பங்குனி உத்திர ஆராட்டு விழாவுக்கு தயாராகிறது பம்பை!
ஆற்றின் தூய்மையைப் பாதுகாக்க, பக்தர்கள் தங்கள் ஆடைகளை ஆற்றில் வீசி எறிவதற்குத் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.
அரசியல்
தொகுதி, வேட்பாளர் தேர்வில் அதிருப்தி: காங்கிரஸில் என்ன நடக்கிறது?
காங்கிரசை எங்க கொண்டு வந்து நிறுத்தியிருக்கீங்க பாத்தீங்களா செல்வப்பெருந்தகை? என்று கட்சியினர் குமுறும் அளவுக்கு அவரது செயல்பாடு இருக்கிறது.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மார்ச் 31 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...
உரத்த சிந்தனை
‘இல்லத்தரசி கூப்பன்’ நன்மையா? நிதிச்சுமையா?
சட்டமன்ற தேர்தலுக்காக தி.மு.க. கொடுத்திருக்கும் தேர்தல் வாக்குறுதிகளில் மகளிர் உரிமைத்தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படும் அறிவிப்பும், ரூ.8000 இல்லத்தரசி கூப்பன்
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மார்ச் 30 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...
கட்டுரைகள்
வேதப் பண்பாட்டில் முறையற்றது எதுவுமில்லை!
வேதங்கள் வேறு, புராணங்கள் வேறு என்று புராணங்களை கீழ்மைப்படுத்துவதைப் பார்க்க முடிகிறது. மேலும் சிலர், இவை எதுவும் தேவையில்லை. வேதாந்தம் மட்டுமே போதும் என்பார்கள்

