இரண்டாயிரம் ரூபாய்க்காக தாயை அடித்து கொன்று புதைத்த மகன்கள்!

murder-2-1

ஈரோட்டில், தாயை அடித்து கொலை செய்து, மயானத்தில் புதைத்த இரு மகன்களை, போலீசார் கைது செய்தனர். ஈரோடு, சூரம்பட்டி வ.உ.சி. வீதியை சேர்ந்த கணேசன் மனைவி சரோஜா, 48: கூலி தொழிலாளி. இவர் கணவர், சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார்.

சரோஜாவுக்கு, விக்னேஷ், 27, அருண்குமார், 23, என, இரு மகன்கள் உள்ளனர். விக்னேஷ் வேன் டிரைவராகவும், அருண்குமார் பிளம்பராகவும் உள்ளனர். வீட்டில் வைத்திருந்த, 2,000 ரூபாயை அவர் தாய் சரோஜா, கேட்காமல் எடுத்து செலவு செய்து விட்டார்.

இதனால் விக்னேஷ், அருண்குமார் இருவரும் நேற்று நள்ளிரவு, 2:00 மணியளவில் மதுபோதையில், சரோஜாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆத்திரத்தில் இருவரும் சேர்ந்து, சரோஜாவை இரும்பு கம்பியால் முகத்தில் சரமாரியாக அடித்துள்ளனர்.

இதில், சரோஜா வலி தாங்க முடியாமல், அலறியுள்ளார். பின்னர் ரத்த வெள்ளத்தில் மயங்கி சாய்ந்தார். அண்ணன், தம்பி இருவரும் தனியார் ஆம்புலன்சில், தாயை ஏற்றி சென்றனர். பின், சரோஜா குறித்த விபரம் தெரியவில்லை.

இதுகுறித்து அக்கம் பக்கத்தினர், சூரம்பட்டி போலீசில் புகாரளித்தனர். சந்தேகமடைந்த போலீசார் விசாரணை நடத்தினர். அதில் சரோஜா இறந்ததும், போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல், மகன்கள் இருவரும் சூரம்பட்டி வலசு மயானத்தில் புதைத்தது தெரியவந்தது.

இதுபற்றி சூரம்பட்டி கிராம நிர்வாக அலுவலர் கார்த்திகேயன், தாசில்தார் பரிமளாதேவிக்கு தகவல் தெரிவித்ததார். பின்னர், தாசில்தார் முன்னிலையில் மயானத்தில் புதைக்கப்பட்ட சரோஜாவின் உடலை வெளியே எடுத்து ஆய்வு செய்தனர்.

அதில், சரோஜாவின் உடலில் முகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், அடித்து கொலை செய்ததற்கான காயங்கள் இருந்தது தெரியவந்தது. விக்னேஷ், அருண்குமார் இருவரையும், சூரம்பட்டி போலீசார் கைது செய்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 31 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘இல்லத்தரசி கூப்பன்’ நன்மையா? நிதிச்சுமையா?

சட்டமன்ற தேர்தலுக்காக தி.மு.க. கொடுத்திருக்கும் தேர்தல் வாக்குறுதிகளில் மகளிர் உரிமைத்தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படும் அறிவிப்பும், ரூ.8000 இல்லத்தரசி கூப்பன்

பஞ்சாங்கம் மார்ச் 30 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

வேதப் பண்பாட்டில் முறையற்றது எதுவுமில்லை!

வேதங்கள் வேறு, புராணங்கள் வேறு என்று புராணங்களை கீழ்மைப்படுத்துவதைப்  பார்க்க முடிகிறது. மேலும் சிலர், இவை எதுவும் தேவையில்லை. வேதாந்தம் மட்டுமே  போதும் என்பார்கள்

ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருமஞ்சனம்..

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண உற்சவம் நடந்து வரும் நிலையில்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 31 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘இல்லத்தரசி கூப்பன்’ நன்மையா? நிதிச்சுமையா?

சட்டமன்ற தேர்தலுக்காக தி.மு.க. கொடுத்திருக்கும் தேர்தல் வாக்குறுதிகளில் மகளிர் உரிமைத்தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படும் அறிவிப்பும், ரூ.8000 இல்லத்தரசி கூப்பன்

பஞ்சாங்கம் மார்ச் 30 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

வேதப் பண்பாட்டில் முறையற்றது எதுவுமில்லை!

வேதங்கள் வேறு, புராணங்கள் வேறு என்று புராணங்களை கீழ்மைப்படுத்துவதைப்  பார்க்க முடிகிறது. மேலும் சிலர், இவை எதுவும் தேவையில்லை. வேதாந்தம் மட்டுமே  போதும் என்பார்கள்

ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருமஞ்சனம்..

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண உற்சவம் நடந்து வரும் நிலையில்...

வளைகுடா போர்கள் தொடர்பில், வதந்திகளை நம்பாதீர்: பிரதமர் வேண்டுகோள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை  உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன்.  இந்த மார்ச் மாதம், உலக அளவில் பெரும் கொந்தளிப்பு நிறைந்த மாதமாக இருக்கிறது. 

பஞ்சாங்கம் மார்ச் 29 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை ஐயப்பன் கோயில் ஆராட்டு விழா ஏப்ரல் 1இல்..

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர ஆராட்டு விழா ஏப்ரல்...

Entertainment News

Popular Categories