ரூ.40,000, ரூ.50,000 சம்பளம் வாங்கிக் கொண்டு ஆசிரியர்கள் போராட்டம் நடத்துவதை ஏற்க முடியாது: நீதிபதி கிருபாகரன் பாய்ச்சல்

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்
தெரிவித்துள்ளது. நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் போராடும் ஆசிரியர்கள் மீது
எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து செப்டம்பர் 18-ம் தேதி பதிலளிக்க தமிழக
அரசுக்கும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். வேலைநிறுத்தத்தால் மாணவர்களுக்கு
ஏற்படும் பாதிப்புக்கு நஷ்டஈடு தர உத்தரவிட நேரிடும் எனவும் நீதிபதி
ஆசிரியர்களை எச்சரித்துள்ளனர்.

முன்னதாக அரியலூர் மாணவி அனிதா போல மாணவர்கள் பாதிக்கப்பட அரசு கொள்கைகளை
காரணம் என குற்றம்சாட்டி சூரியபிரகாஷ் என்பவர் தாக்கல் செய்த மனு சென்னை
உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. நீதிபதி கிருபாகரன் மாணவர்கள்
பாதிக்கப்பட அரசு மட்டும் காரணம் அல்ல என்றும் போராட்டத்தில் ஈடுபடும்
ஆசிரியர்கள் அமைப்புகளும் காரணம் என்று கூறினார். அரசியல் லாபத்திற்காக
அனைத்து அரசியில் கட்சிகளும் ஆசிரியர்களின் போராட்டத்தை ஆதரிப்பதாகவும்
நீதிபதி குற்றம்சாட்டினார்.

பிற்காலத்தில் எந்த ஒரு விவகாரத்திலும் நீதிமன்றத்தை நாட முடியாத அளவிற்கு
உத்தரவு பிறப்பிக்க வேண்டி இருக்கும் என்றும் கூறினார்.
5 மாணவர்களுக்கு மட்டும் மருத்துவ இடம் கிடைத்துள்ளது அரசு பள்ளி
ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள கேவலம் என்று தெரிவித்தர். ரூ.40,000, ரூ.50,000
சம்பளம் வாங்கிக் கொண்டு ஆசிரியர்கள் போராட்டம் நடத்துவதை ஏற்க முடியாது.
ஆசிரியர்கள் என்ன தொழிலாளர் வர்க்கத்தினரா எனவும் நீதிபதி கேள்வி
எழுப்பியுள்ளார்.

போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர் சங்கங்கள் தவறு செய்யும் ஆசிரியர்கள் மீது
நடவடிக்கை எடுத்துள்ளதா என்றும் நீதிபதி கேள்வி எழுப்பினார். அதே நேரத்தில்
பள்ளிக்கல்வித்துறை செயலாளர் உதயசந்திரன் போன்று சிறப்பாக செயல்படும்
அதிகாரிகளை அரசு உடனடியாக இடமாற்றம் செய்துவிடுவதாக நீதிபதி தெரிவித்தார்.
ஆசிரியர்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்
குறித்து தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 15 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 15 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Entertainment News

Popular Categories