சென்னை: திமுக தலைவர் கருணாநிதி உகாதித் திருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார். அவர் வெளியிட்ட வாழ்த்து: ’’தமிழகத்தில் வாழும் தெலுங்கு, கன்னட மொழிகள் பேசும் மக்கள் எமது புத்தாண்டு திருநாளாக ஆண்டுதோறும் கொண்டாடும் “உகாதித்திருநாள்” இந்த ஆண்டில் மார்ச் திங்கள் 21ஆம் நாள் எழுச்சியோடு கொண்டாடப்படுவது அறிந்து மகிழ்கிறேன். தமிழகம் வந்தாரை வரவேற்று வாழவைக்கும் மனவளம் கொண்ட மாநிலம். இந்தியாவின் எந்த ஒரு மாநிலத்தைச் சேர்ந்தவர்க்கும், இங்கு எப்போதும், யாதொரு இடர்ப்பாடும் எவராலும் நேர்ந்ததில்லை; “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்னும் மனப்பான்மை புறநானூற்றுப் பாடலில் மட்டுமல்லாமல், தமிழக மக்களிடம் இன்றும் இயல்பாக மிளிர்வதையே இது காட்டுகிறது. 2001-2006 அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் மறுக்கப்பட்ட உகாதித் திருநாளுக்கான அரசு விடுமுறையை 2006க்குப் பின் மீண்டும் நடைமுறைப்படுத்தியது தி.மு.க. ஆட்சி! தமிழகப் பள்ளிகளில் தெலுங்கு, கன்னடமொழிகள் பயில விரும்பும் குழந்தைகளுக்கு உரிய வசதிகளை ஏற்படுத்தித்தந்தது தி.மு.க. ஆட்சி! தனி வல்லுநர் குழுக்களை அமைத்து, தரமான பாடநூல்களை அவர்களுக்காகத் தயாரித்தும், அவற்றைத் தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் மூலம் அச்சிட்டும் வழங்கிட வகை செய்தது தி.மு.க. ஆட்சி! பெங்களூரு மாநகரில் 18 ஆண்டுகாலம் திறக்கப்படாமல் மூடிக்கிடந்த அய்யன் திருவள்ளுவர் திருவுருவச் சிலை 9.8.2009 அன்று திறந்து வைக்கப்படவும், அதனைத் தொடர்ந்து 13.8.2009 அன்று சென்னை மாநகரில் கன்னடக் கவிஞர் சர்வக்ஞர் சிலை திறந்து வைக்கப்படவும் ஆவன செய்து தமிழக, கர்நாடக மாநில மக்களிடையே நல்லுறவை வளர்ப்பதில் தனிப்பாத அமைத்தது தி.மு.க. ஆட்சி! அதேபோல சென்னைக்கு வந்து சேரும் கிருஷ்ணா நீர் தமிழக, ஆந்திர மாநிலங்களுக் கிடையிலான நல்லுறவை வலுப்படுத்திட உதவுகிறது. கழக அரசு காலத்தில் புதிதாகக் கட்டப்பட்ட சட்டமன்றப் பேரவை -தலைமைச் செயலக வளாகக் கட்டடத் திறப்புவிழா நிகழ்ச்சிக்கு ஆந்திர, கர்நாடக, கேரள, புதுவை மாநில முதலமைச்சர்களையும் அழைத்து, அண்டை மாநிலங்களுக் கிடையே நல்லிணக்க மனப்பான்மைகளை வளர்ப்பதில் புதிய பரிமாணத்தைப் படைத்தது தி.மு.க. ஆட்சி! தி.மு.க. கடைப்பிடித்து வரும் இத்தகைய உறவு மணப்பான்மையும், உணர்வும் தென்னக மாநிலங்களிடையே மேலும் மேலும் வளம்பெற வேண்டும்; வலுப்பெறவும் வேண்டும். இந்த விழைவோடு கன்னட, தெலுங்கு மொழிகள் பேசும் மக்களுக்குத் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் எனது உளமார்ந்த “உகாதித் திருநாள்” நல்வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன்
Hot this week
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...
அரசியல்
திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!
தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!
பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்
சற்றுமுன்
இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி
சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக
நெல்லை
தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!
திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

Topics
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...
அரசியல்
திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!
தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!
பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்
சற்றுமுன்
இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி
சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக
நெல்லை
தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!
திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....
சுற்றுலா
மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
விளையாட்டு
IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!
ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

