வீட்டில் காதலுக்கு மறுப்பு! நகைகளோடு வந்து காதலனைக் கைப்பிடித்த பள்ளி ஆசிரியை.. காவல் நிலையத்தில் தஞ்சம்!

sharmila

வீட்டில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் வீட்டில் உள்ள நகைகள் அனைத்தையும் அணிந்து கொண்டு திருமணம் செய்து கொண்ட பெண் பாதுகாப்பு வேண்டிக் காவல் நிலையத்தில் மனு அளித்தார்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சங்கராபுரத்தைச் சேர்ந்தவர் ஷர்மிளா. இவர் எம்.ஏ, பி.எட், எம்பில் முடித்து அங்குள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்துள்ளார்.

இவரும் அஸ்தம்பட்டியை சேர்ந்த அரசியல் கட்சி ஒன்றின் மாணவரணி செயலாளரான முரளி என்பவரும் கடந்த 5 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் வேறு இனத்தவர் என்பதால் இருவரின் வீட்டிலும் அவர்கள் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

தற்போது ஊரடங்கு என்பதால் பள்ளிகள் திறக்கப் படாததால் இருவரும் சந்திக்க முடியாமல் இருந்தது. இதனை பயன்படுத்திக் கொண்ட ஷர்மிளாவின் பெற்றோர் அவருக்கு வேறு ஒரு பையனை திருமணம் செய்துவைக்க ஏற்பாடுகள் செய்தனர். அதனை அறிந்த ஷர்மிளா வீட்டில் அவரது திருமணத்திற்காக இருந்த நகைகளை அணிந்து கொண்டு அங்கிருந்து தப்பி தன் காதலனிடம் வந்து சேர்ந்தார். பின் இருவரும் அன்னதானப்பட்டியில் உள்ள கோவில் ஒன்றில் வைத்து திருமணம் செய்து கொண்டு பாதுகாப்பு கேட்டு சேலம் காவல் ஆணையர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தார்.

உடல் முழுவதும் நகைகளுடன் தங்களுக்கு பாதுகாப்பு தரக் கோரி வந்த காதல் ஜோடியைக்கண்டு சற்று நேரம் பரபரப்பு நிலவியது.

இந்த சம்பவத்தை போலவே கட்டிடதொழிலாளியான ராமதாஸை காதலித்த ப்ரியா என்ற பட்டதாரிப்பெண் அங்குள்ள நரசிம்ம ரெட்டி கோவிலில் திருமணம் செய்து கொண்டு கழுத்தில் மஞ்சள் தாலியுடன் பாதுகாப்பு கேட்டு காவல் ஆணையரகத்தில் மனு அளித்தனர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

Topics

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

Entertainment News

Popular Categories