குளத்துக்கு பாவம் ஏற்படுத்தி விட்டாராம்: எடப்பாடியாரை குதறும் ‘பகுத்தறிவு’ ஸ்டாலின்

Published:

குளிக்கப் போய் குளத்திற்கு பாவம் ஏற்படுத்தி விட்டார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி என்று பகுத்தறிவு பேசும் திமுக., செயல் தலைவர் ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசும்போது எடப்பாடியாரைக் குதறி எடுத்தார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக செயல் தலைவர் ஸ்டாலின், சபையில் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்ற வழக்கில், நீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பின்னர்தான் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து எந்த முடிவையும் எடுக்க முடியும் என்று

தான் செய்த பாவத்தை நீக்குவதாக நினைத்து முதல்வர் பழனிசாமி குளத்தில் மூழ்கினார். ஆனால், அவர் நீரில் மூழ்கி குளத்திற்கு பாவத்தை ஏற்படுத்தியுள்ளார்  என்று செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின், இரு தினங்களுக்கு முன்னர்தான் அதே குளத்தில் மூழ்கி, குடும்பத்தின் பாவத்தைத் தீர்த்தார் என்று நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் வறுத்தெடுக்கிறார்கள்.

Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img