100 நாள் ‘டயம்’: மக்களுக்காக முதல்வர் ஆகத் தயார் என்கிறார் கமல்!

சென்னை:

100 நாட்களுக்குள் தேர்தல் நடைபெற்றால் அதில் தாம் போட்டியிடத் தயார் என்று நடிகர் கமல் ஹாசன் தெரிவித்துள்ளார். தமிழக மக்களுக்காக, தான் முதல்வராக விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்தியா டுடே டிவியில் செய்தியாளர் பிரியங்காவுடனான பேட்டியில் அவர் இதனைக் கூறியுள்ளார். தாம் எந்த அரசியல் கட்சியிலும் சேரப் போவதில்லை என்றும் புதிய கட்சி தொடங்க உள்ளதாகவும் கூறிய கமல், தற்போதைய தமிழக அரசியல் நிலவரம் குறித்த கேள்விகளுக்குப் பதில் அளித்தார். அப்போது, இது கட்டாயக் கல்யாணம் போல் இருப்பதாகக் கூறினார். தமிழக மக்கள் இந்தக் கட்டாயக் கல்யாணத்தை விட்டு வெளியேற விரும்புகின்றனர் என்றார்.

தாம் நடிகர் ரஜினிகாந்த்தை சில வாரங்களுக்கு முன்பு சந்தித்து, தமது அரசியல் பிரவேசம் குறித்து ஆலோசித்ததாகக் கூறினார். இருவருக்கும் ஊழலை எதிர்ப்பது என்ற பொது நோக்கம் இருந்தாலும் பாதை மட்டும் வேறு வேறு என்று கூறிய கமல், தமக்கு ரஜினியுடன் எந்த முரண்பாடும் இல்லை என்ரார். அவரைக் கட்டியணைத்து தமது அரசியல் முடிவைத் தெரிவித்ததாகக் குறிப்பிட்டார்.

ஆங்கிலத் தொலைக்காட்சிக்கு அளித்த மற்றொரு பேட்டியில் தமிழக மக்களுக்காக தாம் முதல் அமைச்சர் ஆக விரும்புவதாகவும் தமது அரசியல் பிரவேசம் உறுதி என்றும் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

ALSO READ:  அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

முன்னதாக, கமல்ஹாசன் கேரள முதல்வர் பிணரயி விஜயன், தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் ஆகியோருடன் ஆலோசனை நடத்தியுள்ளார். அண்மைக் காலங்களில் கேரளாவுக்குச் சென்று பிணரயி விஜயனை சந்தித்தார். அதனால் அவர் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் சேருவார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், அதை மறுத்தார் கமல். தாம் ஆலோசனை கேட்டதாக மட்டுமே கூறினார்.

பின்னர் நேற்று தில்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கேஜ்ரிவாலுடன் பேசினார். கேஜ்ரிவால் சென்னைக்கு கமல் இல்லத்துக்கே வந்து தமது கட்சியில் சேருமாறு அவருக்கு அழைப்பு விடுத்தார். ஆனால் அதையும் அவர் மறுத்துள்ளார். தனிக்கட்சி என்ற முடிவில் இருப்பதாகக் கூறியுள்ளார் கமல்.

kamal kejriwal - 2026
கமல்ஹாசனை சந்தித்துப் பேசினார் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்.. அவருக்கு மதிய விருந்து அளித்தார் கமல்

முன்னதாக, நேற்றைய அரசியல் பரபரப்பை ஏற்படுத்தினர் கமலும் கேஜ்ரிவாலும்! நடிகர் கமல் அரசியலுக்கு வரவேண்டும் என அழைப்புவிடுத்த கேஜ்ரிவால், ஊழல், மதவாதத்திற்கு எதிராக ஒருங்கிணைந்து செயல்படுவது பற்றி இருவரும் ஆலோசித்ததாகத் தெரிவித்தார்.

அரவிந்த் கேஜ்ரிவாலை விமான நிலையத்தில் கமலின் மகள் அக்‌ஷரா ஹாசன் நேரில் சென்று வரவேற்று, ஆழ்வார்பேட்டையில் உள்ள நடிகர் கமல்ஹாசன் வீட்டுக்கு அழைத்துச் சென்றார். அங்கே கேஜ்ரிவாலுக்கு நடிகர் கமல் மதிய விருந்து அளித்தார். பின்னர் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற ஆலோசனைக்குப் பிறகு இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, தில்லி முதலமைச்சர் கேஜ்ரிவால் தன்னை சந்திக்க வேண்டும் என்று கேட்டதே பாக்கியம் என கமல் குறிப்பிட்டார். ஊழலுக்கு எதிரான யாரும் தமக்கு உறவினர்கள் ஆகிவிடுவதாகவும், ஊழலுக்கு எதிரானவர் என்ற வகையில் கேஜ்ரிவாலுடன் தனது உறவு தொடர்வதாகவும் கூறினார்.

ALSO READ:  டெட் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பில் உடனடி சட்ட நிவாரணம் தேவை!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

Topics

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

Entertainment News

Popular Categories