December 6, 2025, 5:47 AM
24.9 C
Chennai

ஒரு மாதம் புது மண வாழ்க்கை! காதலியுடன் கம்பி நீட்டிய கணவன்!

lovers

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் குறிஞ்சி நகர் பகுதியை சார்ந்தவர் பழனிச்சாமி. இவரது மகன் கிருஷ்ணமூர்த்தி (வயது 26). இதே பகுதியை சார்ந்தவர் புவனேஸ்வரி (வயது 19). இவர்கள் இருவருக்கும் கடந்த 55 நாட்களுக்கு முன்னதாக திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.

இந்நிலையில், சம்பவத்தன்று வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற கிருஷ்ணமூர்த்தி, வீட்டிற்கு திரும்பவில்லை. மேலும், உறவினர்கள் அல்லது நண்பர்களின் இல்லத்திற்கு சென்றிருக்கலாம் என்று எண்ணியிருந்த நிலையில், எங்கு தேடியும் அவரை காணவில்லை.

இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள துவங்கினர்.

இந்த விசாரணையில், சீனிவாசபுரம் பகுதியை சார்ந்த மோனிகா என்ற பெண்மணியுடன், கிருஷ்ணமூர்த்தி பழகி வந்தது தெரியவந்துள்ளது.

மேலும், இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில், புவனேஸ்வரியுடன் திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. தற்போது மனைவியை விட்டுவிட்டு காதலியுடன் கிருஷ்ணமூர்த்தி தலைமறைவாகியுள்ளது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதில் அப்பாவியான பெண்ணின் வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெற்றோர்களின் வற்புறுத்தலின் பேரில் திருமணம் செய்ய முற்பட்டால் பெண்ணிடமாவது மனதை திறந்து பேசி, என்னை பிடிக்கவில்லை என்று கூறுமாறு காலில் விழுந்திருக்க வேண்டும்.

திருமணம் செய்துவிட்டு, புதுமண தம்பதி போல வாழ்ந்துவிட்டு காதலியுடன் தலைமறைவாவது எப்படிப்பட்டது? என்று பெண் வீட்டார் கொந்தளிப்பில் இருக்கின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories